பாண்டியனிடம் போட்டுக் கொடுத்த மூத்த மருமகள்.. தங்கமயிலை மிரட்டி விட்ட ராஜி.. இரண்டாகப் பிரியப் போகும் குடும்பம்..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சமீபத்திய எபிசோடில் ராஜி டியூஷன் எடுப்பதற்கு பாண்டியனிடம் கேட்காமல் ஆரம்பித்து விட்டார் அப்பொழுது ஒருவன் இங்கிலீஷில் டவுட் கேட்க அதற்கு ராஜி என்ன விட அதிகமாக படித்தவர் தங்கமயில் தான் என அந்த பையனிடம் கூற உடனே எனக்கு போன் வருவதாக கூறிக்கொண்டு தன்னுடைய அம்மாவிடம் ஐடியா கேட்கிறார் தங்கமயில்.

உடனே டியூஷன் எடுப்பதை நிறுத்தி விட்டால் உன்னுடைய பிரச்சனை சரியாகிவிடும் அதனால் உன் மாமனாரிடம் இதனை போட்டுக் கொடு எனக் கூற சைலண்டாக சென்று பாண்டியனிடம் போட்டுக் கொடுத்து விடுகிறார். இதனால் ராஜியை பாண்டியன் திட்டி விடுகிறார் சோகத்தில் இருந்த ராஜி மீனாவிடம் சொல்லி தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்க்கிறார்.

அப்படி இருக்கும் நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் மீனா பீச்சில் இருக்கும் புகைப்படத்தை ராஜிக்கு பகிர்ந்துள்ளார் அதனைப் பார்த்து ராஜி சந்தோஷப்படுகிறார் அது மட்டும் இல்லாமல் கோமதியிடம் காட்ட அவரும் சந்தோஷப்படுகிறார் அந்த சமயத்தில் தங்கமயில் வர தங்கமயில் என்ன என கேட்க பீச் போட்டோவை காட்டுகிறார்கள்.

அப்பொழுது இதனை பார்த்து தங்கமயில் உடனே பாண்டியன் அவர்களிடம் சென்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது கோமதியிடம் பாண்டியன் செந்தில் என்ன பண்றான் போனை எடுக்கவே இல்ல ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளது என பேசிக் கொண்டிருக்க கோமதி ஏதோ சொல்லி மழுப்ப பார்க்கிறார் அப்பொழுது தங்கமயில் அவர்கள் பீச்சில் இருக்காங்க போட்டோவை அனுப்பி இருந்தாங்க நான் கூட பார்த்தேன் என நைசாக கூறிவிடுகிறார்.

இதனால் பாண்டியன் கோபப்பட்டு இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல நீ என்கிட்ட மறைக்கிறியா என கோமதியிடம் கேட்கிறார் ஆனால் கோமதி இல்ல நான் மறந்துட்டேன் சொல்றதுக்கு என்ன சொல்லி சமாளிக்கிறார் அப்பொழுது பாண்டியன் இந்த வீட்ல தங்கமயில் மட்டும் தான் என்கிட்ட எல்லா உண்மையும் சொல்றது நீங்க எல்லாம் என்கிட்ட மறைக்கிறீங்க என தங்க மயிலை புகழ்கிறார்.

அதே சமயத்தில் தங்க மயிலை தனியாக அழைத்து ராஜி தங்கமயிலை பார்த்து உங்களுக்கு தேவையில்லாத விஷயத்தை நிறைய செய்றீங்க இதுக்கு மேல செஞ்சீங்கன்னா அவ்வளவு தான் என்பது போல் மிரட்டி விடுகிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.