பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மற்றொரு நிகழ்ச்சியின் மூலம் வேற லெவலில் பிரபலமான ராஜூ – ஷாக்கான மற்ற போட்டியளர்கள்.

சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மக்கள் அனைவருக்கும் பிடித்த ராஜு பிக்பாஸ் டைட்டிலை வென்றார். அவரை அடுத்து அடுத்தடுத்த இடங்களில் பிரியங்கா, பாவணி போன்றோர் உள்ளனர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த சில வாரங்கள் நிறைவடைந்த பிறகு..

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று கூடிய நிகழ்ச்சியான பிக் பாஸ் கொண்டாட்டம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில் போட்டியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர் இருந்தாலும் தாமரை, நிரூப், சுருதி, அபிநய் போன்ற 4 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

ஏனெனில் தற்போது ஹாட்ஸ்டார் இல் புதிதாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரை நடந்த சீசன்களில் கலந்து கொண்ட பிரபலங்கள் சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் அதில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் இருந்து இந்த 4 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்ட பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அமைந்தது. மேலும் பிக்பாஸ் பிரபலங்கள் சிலர் நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் டைட்டில் வின்னர் ராஜுவை பெருமைப்படுத்தும் வகையில் ராஜுவின் ரசிகர்கள் சிலர்..

இந்த நிகழ்ச்சிக்கு வந்து ராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர் மேலும் பெரிய மாலை ஒன்றை ராஜுவிற்கு அணிவித்தனர். இதனால் ராஜு மிக மகிழ்ச்சி அடைந்து சற்று பேச வார்த்தை இல்லாமல் நின்றார். ஏனென்றால் அந்த அளவிற்கு அவரது முகத்தில் அவ்வளவு சந்தோஷம் இருந்தன. தற்போது இந்த செய்தி தான் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Leave a Comment