ஒரே மாதத்தில் மூன்று மாடல் அழகி தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!

கேரளாவில் உள்ள  கொச்சியில் குடியிருந்த கேரளா நடிகை தற்கொலை செய்துகொண்ட விவகாரம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்  கேரளா நடிகை மற்றும் மாடலும் ஆகிய திருநங்கை ஷெரினை அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.

நேற்று முதல் அவரது வீட்டை விட்டு வெளியே வராததால் வீட்டை திறந்து பார்த்தபோது தூக்கில் தொங்கியவாறு இருந்தார் பிறகு அக்கம்பக்கத்தினர் அவரது உடலை மீட்டனர். அதுமட்டுமல்லாமல் அவர் இறக்கும்போது தனது கைப்பேசியில் வீடியோ அழைப்பு செய்தபடி அவர் தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது.

sherin
sherin

இவரை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் தான் கேரளா நடிகை மற்றும் மாடலுமான சஹானா கோழிக்கோட்டில் உள்ள அவரது வீட்டில் இதேபோல் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதைப் பார்த்த அவரது கணவர் தனது மடியில் வைத்து அழுதுகொண்டே கூச்சலிட்டார் அப்போது அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்து போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அப்போது அவருடைய அறையில் போதை பொருள்கள் இருந்தது என்று தெரியவந்துள்ளது. இதனால் சரண்யாவின் மரணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

sahana
sahana

இதற்கு சில வாரங்கள் முன்பு  மாடல் ரிபா  துபாயில் மரணம் அடைந்தார். இவரது இறப்பில் சந்தேகப்பட்ட பெற்றோர் விசாரணை கோரினார். ஒரே மாதத்தில் மூன்று மாடல்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment