மாரடைபால் மறைந்து போன எதிர்நீச்சல் மாரிமுத்துவின் மகன் மற்றும் மகளை பார்த்து உள்ளீர்களா.! கண் கலங்க வைக்கும் புகைப்படம்

Marimuthu passed away
Marimuthu passed away

Marimuthu Family Photo : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் மாரிமுத்து இவர் முதலில் வாலி படத்தில் நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், யுத்தம் செய், ஜீவா, கொம்பன், மாப்பிள்ளை..

சிங்கம், மருது, ருத்ர தாண்டவம், டாக்டர், எம்ஜிஆர் மகன், பூமி, நான் சிரித்தால் என பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து புகழடைந்த இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கைத்தட்டல் வாங்கினார்.

சினிமா உலகில் இவர் ஒரு நடிகராக மட்டும் தன்னை வெளிக்காட்டி கொள்ளாமல் இயக்குனராகவும்  வென்றுள்ளார் அந்த வகையில் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் சமீப காலமாக சின்னத்திரை பக்கமும் அதிகம் கவனம் செலுத்து வருகிறார்.

அந்த வகையில் சன் டிவி, சோனி, கலைஞர் டிவி போன்றவற்றில் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வந்த இவர் அண்மையில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார் இவருடைய ஏய் என்னம்மா என்கின்ற டயலாக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலானது. எதிர்நீச்சல் சீரியல் இன்று உச்சத்தில் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் மாரிமுத்து தான்..

இந்த நிலையில் இவர் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு சாலிகிராம் வழியாக செல்லும் பொழுது மாரடைப்பு காரணமாக இயற்கை எழுதி உள்ளார். இந்த செய்தியை கேட்டு பலரும் தற்பொழுது சோகத்தில் வாழ்ந்துள்ளனர். மறைந்து போன மாரிமுத்து தனது குடும்பத்துடன் இருக்கும் அந்த அழகிய புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளது.

Marimuthu
Marimuthu
Marimuthu family photo
Marimuthu family photo