பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை மட்டும் மணிரத்தினம் தனியாக கவனித்துக் கொள்வார்..! சீக்ரெட்டை சொன்ன பிரபல நடிகர்.

ponniyin-selvan
ponniyin-selvan

சமீபகாலமாக தென்னிந்திய சினிமா உலகில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் எடுக்கப்படுகின்றன அந்த படங்களும் மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விப்பதோடு பிரம்மாண்டமான வசூலை அள்ளுகின்றன. அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் அவருக்கு என ஒரு கனவு இருந்தது.

பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்பதுதான் அதற்காக பல தடவை முயற்சித்தாலும் தோல்வியை மட்டுமே சந்தித்தார் ஒரு வழியாக டாப் தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்து பொன்னியின் செல்வன் படத்தை 500 கோடி பட்ஜெட்டில் தற்பொழுது எடுத்துள்ளார். அதில் முதல் பாகம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருவதால் முதல் நாள் மிகப் பிரமாண்டமான ஒரு வசூலை பொன்னின் செல்வன் படம் அல்லும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், கிஷோர், ஜெயராம், திரிஷா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் மக்கள் மற்றும் ரசிகர்களை பிரமிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படம் குறித்து நமக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் ஜெயராம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சில விஷயங்களைப் பகிர்ந்து உள்ளார். தாய்லாந்து ஷூட்டிங்கில் இயக்குனர் மணிரத்தினம் தனக்கென ஒரு பீர் வாங்கி கொடுத்து விடுவார் என ஜெயராமே பேட்டியில் சொல்லி உள்ளார். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது..