கைதி 2வை வைத்து லோகேஷ் போட்ட ஸ்கெட்ச்.. தலைவரால் மாறிய பிளான்

லோகேஷ் ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். ஆனால் திடீரென தலைவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைவால் தற்போது படப்பிடிப்பில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் விரைவில் வீடு திரும்ப இருக்கிறார். அதன் பிறகு அவர் ஓய்வு எடுத்துக் கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள சில நாட்கள் ஆகும். அதனால் 17ஆம் தேதி அவர் கூலி ஷூட்டிங்கில் பங்கேற்பார் என கூறப்பட்டது.

இப்போது பார்த்தால் இன்னும் சில நாட்கள் அவருக்கு பூரண ஓய்வு தேவை. அதனால் ஷூட்டிங் செல்வது மேலும் தாமதமாகும் என கூறுகின்றனர். இதனால் லோகேஷ் போட்ட திட்டம் தவிடு பொடியாக்கியுள்ளது.

அதாவது கூலி படத்தின் படப்பிடிப்பை விரைவாக முடித்துவிட்டு அடுத்ததாக அவர் கைதி 2 சூட்டிங்கை ஆரம்பிக்க திட்டமிட்டு இருந்தார். அதன்படி ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கி ஒரே ஷெட்யூலில் முடித்து விட ஸ்கெட்ச் போட்டிருந்தாராம்.

அது மட்டுமல்லாமல் ஐம்பது நாட்களில் மொத்த படத்தையும் முடிப்பது தான் அவருடைய எண்ணம். ஆனால் தற்போது தலைவரால் கூலி இன்னும் சில மாதங்கள் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது கைதி 2 படப்பிடிப்பு அடுத்த வருடத்தின் பாதிக்கு மேல் தான் தொடங்கும் என கூறப்படுகிறது.

மேலும் இதில் சூர்யா கூட நடிக்க இருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது. இதனால் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் அது தள்ளிப் போய் இருப்பது சிறு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.