நான்கு ஆண்களுக்கு மத்தியில் நான் உடை மாற்றினேன்.. ஆனால் அம்பாசிட்டரில் கூட… பல வருடம் கழித்து ரகசியத்தை உடைத்த குஷ்பு…

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள் ரசிகர்கள் என்றால் அது நடிகை குஷ்புக்கு தான் அந்த பெருமை சேரும். இட்லிக்கு பெயர் போன குஷ்பூ இன்று அளவிலும் பல கடைகளில் குஷ்பு இட்லி என்று  கூறுவார்கள்.

குஷ்பூ தற்பொழுது தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் குஷ்பு நடிப்பில் வெளியாகிய நாட்டாமை, அண்ணாமலை, சின்னதம்பி, மகளிர்க்காக என பல திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு சரத்குமார், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

மேலும் இவர் சுந்தர்சியை திருமணம் செய்து கொண்டார் இவர் கொடுத்த சமீபத்திய பேட்டி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் தன்னுடைய சினிமா ஆரம்ப வாழ்க்கை குறித்து சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார் அவர் கூறியதாவது. அப்பொழுது இது மாதிரி கேரவன் கிடையாது ஒரு காட்சி முடிந்த அடுத்த காட்சிக்கு தயாராக உடைகள் மாற்ற வேண்டும் என்றால் நம்முடன் இரண்டு லைட் மேன்கள் மற்றும் இரண்டு ஒப்பனை கலைஞர்களை அனுப்புவார்கள் அவர்கள் நான்கு பேரும் கையால் ஒரு பெரிய துணியை வைத்து என்னை மறைத்துக் கொள்வார்கள் நான் உள்ளே ஆடையை மாற்றுவேன்.

என்னைச் சுற்றி நாலு பேர் இருந்தாலும் எனக்கு அந்த பயம் எப்பொழுதும் கிடையாது அவர்கள் ஏற்படுத்திய நம்பிக்கை அப்பொழுது செல்போன் கிடையாது என்பதால் எனக்கு பயமே கிடையாது. ஆனால் இப்பொழுது பயம் இருக்கிறது அது மட்டும் இல்லாமல் அம்பாசிடர் காருக்குள்  உடை மாற்றியுள்ளேன் அப்பொழுது அம்பாசிடர் காருக்கு மேல் துணியை போட்டு மூடப்பட்டிருக்கும் டிரைவர் மட்டும் காருக்கு வெளியே யாரும் வராமல் பார்த்துக் கொள்வார் அந்த நம்பிக்கை தான் நிம்மதியாக பணியாற்ற ஏதுவாக இருந்தது.

இன்றைக்கு கேரவன் வந்திருந்தாலும் முந்தைய காலத்தில் இது போன்ற சூழ்நிலை சந்தித்ததால் தான் இன்றைக்கு கேரவன் வந்துள்ளது என குஷ்பு பேசியுள்ளார்.