விராட் கோலியின் சாதனையை தட்டிதூக்கினாரா ரோஹித் சர்மா!!

நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையிலான ஐந்தாவது ஒரு நாள் T20 போட்டியில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 163/3 எடுத்தது.இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து அதன் மூலம் இந்திய அணி 7 ரன்கள் வெற்றி பெற்றது.

இதன் மூலம் நியூசிலாந்தை இந்திய அணி அதன் சொந்த மண்ணில் 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் பண்ணியதன்மூலம் அடிபணிந்தது நியூசிலாந்து. இந்திய அணி தரப்பில் அதிக ரன்கள் அடித்த அதிரடி மன்னன் ரோஹித் சர்மா அரைசதத்தை கடந்த மூலம் ரோகித் சர்மா உலக அளவில் T20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் கடந்த வீரர்களில் விராட் கோலியை விட. ரோகித் சர்மா முன்னிலை வசிக்கிறார்.

rohit sharma

இதன் மூலம் அரை சதங்கள் அதிகம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித்சர்மா 25 அரைசதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 24 அரை சதங்களுடன் இரண்டாமிடம் வசிக்கிறார். இந்திய அணியில் ரோகித் சர்மா முடிசூடா மன்னனாக விளங்கிக் கொண்டு வருகிறார்.

T20 கிரிக்கெட்டில் அரங்கில் அதிரடி மன்னன் ரோஹித் சர்மா சிறப்பாக பங்காற்றி வருகிறார். இன்னும் இவர் பல சாதனைகளை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version