டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்த அசோக் செல்வனின் மனைவி கீர்த்தி பாண்டியன்.. வைரல் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி பாண்டியன் இவர் தும்பா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் அசோக் செல்வன் அவர்களுடன் இணைந்து ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கீர்த்தி பாண்டியன் வேறு யாரும் கிடையாது அருண்பாண்டியனின் மகள் தான் , மேலும் சினிமாவில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தனது தந்தை நடத்தி வந்த தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்.

அந்த வகையில் இவர் முதன் முதலில் தயாரித்த திரைப்படம் சவாலே சமாளி இதில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருந்தார் ஆரம்பத்தில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டார்கள் அப்பொழுது நட்புடன் இருந்த அவர்கள் பிறகு காதலராக மாறினார்கள்.

கிட்டத்தட்ட 10 வருடங்களாக அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் காதலித்து வந்தார்கள் இந்த உறவுக்கு கடந்த வருடம் தான் முற்றுப்புள்ளி வைத்தது அதாவது இவர்களின் உறவு திருமணத்தில் முடிந்தது.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அதற்கு காரணம் இருவருக்கும் ஏற்பட்ட கெமிஸ்ட்ரி தான் கீர்த்தி பாண்டியன் ஆரம்பத்தில் இருந்து நேரடியாக பேசும் பழக்கம் உடையவர் அந்த வகையில் நிறம் குறித்தும் நிறத்தால் தான் ஒதுக்கப்பட்ட சம்பவங்கள் குறித்தும் பல வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதில் இவரும் ஒருவர் அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்க கணவர் அசோக் செல்வன் எதுவும் சொல்ல மாட்டாரா இப்படி டூ பீஸ் உடையில் புகைப்படத்தை வெளியிடுகிறீர்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..