மும்பையில் செட்டில் ஆகிவிட்டாரா ஜெயம் ரவி.. அவரே கொடுத்த விளக்கம்

கடந்த சில மாதங்களாக ஜெயம் ரவியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விஷயங்கள் மீடியாவை பரபரப்பாகியது. அதிலும் அவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய போவதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதை அடுத்து ஆர்த்தி மீது தான் தவறு என சிலர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்கள். இன்னொரு பக்கம் ஜெயம் ரவிக்கு பாடகியுடன் நெருங்கிய நட்பு இருக்கிறது. இதுதான் இந்த விவாகரத்துக்கு காரணம் என்று கதை பரப்பினார்கள்.

ஒரு கட்டத்திற்கு மேல் இதை பொறுக்க முடியாத ஜெயம் ரவி இது அனைத்தும் வதந்தி தான். விவாகரத்துக்கு தனிப்பட்ட காரணங்கள் இருப்பதாக கூறி இருந்தார். அதன் பிறகு தான் இந்த சர்ச்சை ஓய்ந்தது.

ஆனால் இப்போது அவர் மும்பையில் இருப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்வி சுற்றி வருகிறது. தற்போது பிரதர் படத்தில் நடித்த முடித்திருக்கும் ஜெயம் ரவி அதன் பிரமோஷனில் பிஸியாக இருக்கிறார். வரும் தீபாவளிக்கு அப்படம் வெளியாகிறது.

அதற்காக அவர் கொடுத்த பேட்டியில் மும்பைக்கு சென்றது ஏன் என தெரிவித்துள்ளார். அதாவது இதற்கு முன்பே அவர் ஹிந்தியில் நடிப்பதற்கு சில வாய்ப்புகள் வந்திருக்கிறது. ஆனால் இரண்டாவது ஹீரோ என்பதால் அதை மறுத்துள்ளார்.

தற்போது அவர் இருக்கும் மனநிலையில் ஹிந்தியிலும் கவனம் செலுத்தலாம் என நினைத்திருக்கிறார். அதன்படி தமிழில் முழு கவனம் செலுத்துவதோடு ஹிந்தி படங்களிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

அதனால் மும்பையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் விவாகரத்தால் அவருக்கு ஏற்பட்ட மன காயத்திற்கு இந்த இடம் மாற்றம் ஆறுதலாக இருக்கும் என அவருடைய முடிவின் மூலம் தெரிகிறது.