தனத்தை அசிங்கப்படுத்திய ஜனார்தன்.! கோவப்பட்டு சவால் விட்ட பாண்டியன் ஸ்டோர் மூத்த மருமகள்…

பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை விட்டு பிரிந்த ஜீவாவையும் கண்ணனையும் எப்படியாவது சேர்க்க வேண்டும் என்று தனமும் கதிரும் போராடி வருகிறார்கள். அதற்கு உறுதுணையாக தற்போது முல்லையின் வளைகாப்பு அமைந்திருக்கிறது.

முல்லையின் வளைகாப்புவை வைத்து ஜீவாவையும் கண்ணனையும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் இணைக்க கதிரும் தனமும் ஒரு புதிய திட்டம் தீட்டி வருகிறார்கள். முல்லையின் வளைகாப்பிற்கு ஜீவாவை சூப்பர் மார்க்கெட்டில் சந்தித்து பேசும் கதிர் வளைகாப்புக்கு வரச் சொல்லி இருக்கிறார்.

நீங்க சந்தோசமா இருக்கிறத தூரமாய் இருந்து பார்த்து ரசித்து செல்கிறேன் என்று ஜீவா கூறுகிறான். ஆனால் கதிர் நீ வந்தா யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் அதனால முல்லையின் வளைகாப்புக்கு வந்து தான் ஆக வேண்டும் என்று கூறுகிறான் கதிர். ஆனால் ஜீவா என்னால் வர முடியாது என்று சொல்லிவிடுகிறான்.

இதனால் அப்சட் ஆனா கதிர் வளைகாப்பு வேண்டாம் என வீட்டில் உடனே கூற அதை கேட்டு கடுப்பான பார்வதி தாம் தூம் என குதிக்கிறாள். உங்க அண்ணன் தம்பி பிரச்சனையை பார்கிரின்களே முல்லையை பற்றி நினைச்சிருக்கின்களா என்று நியாயமாக பேசுகிறாள். அதற்கு கதிரும் வகையாப்பு வேணாம்னு சொல்லல வீட்ல வைத்து ஆடம்பரமாக செய்ய வேண்டாம் சிம்பிளாக செய்து விடுவோம் என்கிறார்.

இதைக் கேட்ட பார்வதி அது எப்படி மீனாவுக்கு மட்டும் ஊரை கூட்டி வளைகாப்பு செய்து விட்டு முல்லைக்கு மட்டும் சிம்பிளா செய்யணும் என்று பஞ்சாயத்து வைக்கிறார். பிரச்சனையை வளர்க்கக்கூடாது என முடிவு செய்த மூர்த்தி இந்த வளைகாப்பு காலத்துக்கும் நிக்கிற மாதிரி இருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் பண்ண வேண்டாம் என கூறுகிறார்.

இதனால் தனம் புலம்ப ஆரம்பித்தார்.  அதன் பிறகு தனம் ஜீவாவை சந்திக்க அவருடைய மாமனார் வீட்டிற்கு செல்கிறார். தனம் வீட்டிற்கு போன உடனே கலையைப் பார்த்து சித்தி நல்லா இருக்கீங்களா என்று கேட்கிறாள் நேத்து தான வந்துட்டு போன என மூஞ்சியில் அடித்தது போல புண்படுத்தி இருக்கிறார் கலை.

அதன் பிறகு ஜீவா வரும் வரை காத்திருந்த தனம் அதன் பிறகு ஜீவா வந்தவுடன் முல்லையின் வளைகாப்பு பற்றி பேசுகிறால் ஆனால் நீங்கள் கேட்டு நான் மாட்டேன்னு சொல்லி கஷ்டப்படுத்த விரும்பவில்லை என தனத்திடம் நாசுக்காக வர முடியாது என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு தனம் வீட்டை விட்டு வெளியே போகும்போது அவருடைய பின்னாடியே வந்த ஜனாவர்த்தன் என்ன தனம் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை மறுபடியும்  சேர்க்கலாம் என்று நீ பாக்குற அதுக்காக நீ எவ்வளவு கஷ்டப்படுற என்று நைசாக கொளுத்தி போட்டு விடுகிறார்.  ஆனால் தனம் அவருடைய பேச்சைக் கேட்காமல் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் மறுபடியும் இணையும் என சவால் விட்டு வருகிறார்.

அதன் பிறகு மாப்பிள்ளை ஜீவாவிடம் கொளுத்தி போடுகிறார். உடனே மீனா வந்து ஜீவாவிடம் உன்னுடைய கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடியுது ஆனால் நான் கர்ப்பமாக இருக்கும் போது அண்ணி என்னை எவ்வளவு நல்லா பாத்துக்கிட்டாங்க இப்ப நம்ம முல்லை கூட இருக்கணும் இவ்வளவு கஷ்டத்துக்கு மத்தியில முல்லைக்கு ஒரு நல்லது நடக்க போகுது என்று மீனா நியாயமாக பேசுகிறார்.

இதைக் கேட்டு ஜனார்த்தன் கலையும் கடுப்பாகி தடை போடுகிறார்கள் ஆனால் மீனா விடாமல் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்துக்காக பேசுகிறாள்.

Leave a Comment