ரசிகர்களே.. நடிகர்களை நம்பினால் கடைசியில் நீங்கள் தலையில் துண்டு தான் போடுவீர்கள் – உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகர் – தலைவனுக்கு பயமே இல்லா போல..

சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் எப்பொழுதும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒரு கட்டத்தில் மக்கள் மற்றும் ரசிகர்களையும் கவர்ந்து விடுவார்கள் அதனால் ரசிகர்களும் அவரை பின் தொடர்வார்கள் ஒரு கட்டத்தில் அந்த நடிகர்கள் நான் இப்படி செய்கிறேன் அப்படி பண்ணுகிறேன் என கூறி ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைப்பது வழக்கம்.

சொன்னதை செய்கிறார்களா இல்லையா என்று நாம் அதை பெரிதாக உற்றுநோக்கி கவனிக்க மாட்டோம் அதை வெளிப்படையாக பிரபல நடிகர் ராதாரவி வெளிப்படையாக கூறியுள்ளார் அவர் கூறியது. சினிமாவுலகில் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் கெஸ்ட் என எல்லாவற்றிலும் நடித்து தென்னிந்தியத் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் ராதாரவி.

இவர் எப்பொழுதும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவராக தான் இன்று வரையிலும் இருக்கிறார் யாரும் எதற்காகவும் பயப்பட மாட்டார் பேசிய பின் எந்த மாதிரியான பின்விளைவுகள் வந்தாலும் பயப்படாமல் தனது பாணியில் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமிபத்தில் ராதாரவி பேசியது : நடிகர்கள் யாரையும் நீங்கள் நம்ப கூடாது என தெரிவித்தார்.

இச்செய்தியை தற்போது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது ஒரு நடிகரே இவ்வாறு சொல்வது இதுவே முதல் முறை என பலரும் கூறினார் ஏன் அவ்வாறு அவர் கூறினார் என்றால் ஒரு சில நேரத்தில் நடிகர்கள் ரசிகர்களிடம் நல்லவர்களாக பேசுவதும் அக்கறை உள்ளவர்களாக நடந்து கொள்வது போல இருக்கும் ஆனால் படம் வெளிவந்த பிறகு அதற்கு அப்படியே எதிர்மறையாக மாறி விடுவார்கள் என கூறினார்.

அந்தக் காரணத்தினால் தான் ரசிகர்கள் நடிகர்களை நம்ப கூடாது என தெரிவித்துள்ளார்.  படத்தைப் பாருங்கள் என்ஜாய் பண்ணுங்கள் ஆனால் நடிகர் நடிகைகளை எப்போதும் பெரிய அளவில் நம்பாதீர்கள் என அவர் மறைமுகமாக சொல்லி உள்ள செய்தி தற்போது வரவேற்கத்தக்க ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

Leave a Comment