தாலி கட்டுவதற்கு முன்பே எனக்கு குழந்தை வேண்டும்.! இப்படி ஒரு விபரீத ஆசையை ஓபனாக கூறிய சீதா மகாலட்சுமி..

சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியான சீதா ராமம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இந்த திரைப்படத்தின் கதை, பாடல் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருந்த நிலையில் மேலும் இந்த திரைப்படத்தின் நடித்திருந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை மிருணாள் தாக்கூர்.

இந்த திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டியம் பிரபலமடைந்த இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பு தொடர்ந்து தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்தார். மேலும் ஒரு சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் சீதா ராமம் திரைப்படம் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து ஏராளமான தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் சமீப பேட்டி ஒன்றில் இவர் கூறிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அதாவது இவர் கூறியதாவது எனக்கு திருமணம் ஆகவில்லை ஆனால் தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாகவும் இதனால் கருமுட்டை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு என் குழந்தைக்கு ஒற்றைப் பெற்றோராக நான் இருக்க எனது பெற்றோரும் விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனக்கு பிடித்த நல்ல துணை கிடைத்தவுடன் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு பார்க்கும் பொழுது இன்னும் சில மாதங்களில் இவர் திருமணம் ஆகாமல் கருமுட்டை மூலம் குழந்தை பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு நடிகை மிருணாள் தாக்கூர் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை கூறியது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Exit mobile version