தளபதியின் முதல் நாள் சம்பவம்.. பாக்ஸ் ஆபிஸை கலக்கும் கோட் வசூல்

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் வெளியான கோட் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அங்கங்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் மொத்தத்தில் படம் பக்கா என்டர்டெயின்மென்ட் என்ற கருத்துக்களும் வந்து கொண்டிருக்கிறது.

அதேபோல் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா ஆந்திரா கர்நாடகா உட்பட வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதேபோல் அடுத்த சில நாட்களும் டிக்கெட் முன்பதிவு சிறப்பான சம்பவமாக இருக்கிறது. இதனால் பல பேர் டிக்கெட் கிடைக்காமல் படத்தை பார்க்க முடியவில்லை என்ற சோகத்தில் இருக்கின்றனர்.

இப்படி ஆரவாரப்படுத்தும் கோட் முதல் நாளில் 126 கோடிகளை வசூலித்துள்ளது. இதை தயாரிப்பாளர் அர்ச்சனா தன் சோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடுமுறை நாட்களாக இருப்பதால் இந்த வசூல் அடுத்தடுத்த நாட்களில் அதிகரிக்கும். அதனால் கோட் இன்னும் சில நாட்களில் 500 கோடியை தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.