பல பலனு பால்கோவா மாதிரி இருந்த நான் சர்வையர் நிகழ்ச்சிக்குப் பிறகு எப்படி மாறி விட்டேன் பார்த்தீர்களா.! காயத்ரி வெளியிட்ட முதல் புகைப்படம்.!

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பி இல் முதல் இடம் பிடிப்பதற்காக புதிய புதிய சீரியல் மற்றும் புதிய புதிய ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த வருடம் ஐந்தாவது சீசன் துவங்கியது இந்த சீசன்  அக்டோபர் 3 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வையர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி தொடங்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய பிறகும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த சர்வையர் நிகழ்ச்சி. ஜான்சிபர் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் பதினாறு போட்டியாளர்கள் அங்கு தங்கியிருந்து அங்கு கொடுக்கப்படும் சவால்களை கடந்து வருவது தான் சர்வையர் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியை அர்ஜுன் அவர்கள்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த 16 போட்டியாளர்கள் காடர்கள் வேடர்கள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு சவாலாக கொடுக்கப்பட்டு அதை தாக்குபிடிக்க முடியாமல் போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியே வருகிறார்கள்.  ஒவ்வொரு நாட்களும் செல்லச் செல்ல இந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் சவால்கள் மிகவும் கடினமாக இருக்கிறது.

gayathri
gayathri

அதிலும் பெசன்ட் ரவி டாஸ்க் தன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் காயத்ரி வெளியேறினார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே இந்த நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் நிலையில் காயத்ரி நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து ஏர்போர்ட்டில் இருந்து கொண்டு முதன்முறையாக வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது நான் இந்தியாவிற்கு திரும்பி வருகிறேன் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வருவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை நான் என்னுடைய ஹன்ட்டை ரொம்பவும் மிஸ் செய்கிறேன். எப்பொழுதும் என்மீது ஒரு பத்து எறும்புகள் ஓடிக்கொண்டிருக்கும் அங்கே இருந்த நினைவுகள் அனைத்தையும் நான் ரொம்பவும் மிஸ் செய்கிறேன்.

அந்த நிகழ்ச்சியில் இருந்தபோது எப்பொழுது வெளியே செல்வோம் என நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் வெளியே வந்த பிறகு தான் ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது இந்த நிகழ்ச்சி எனக்கு மிக சிறந்த அனுபவத்தை கற்றுக் கொடுத்தது. எல்லாரும் ஜெயிக்க முடியாது யாராவது ஒருவர் தான் ஜெயிக்க முடியும்  அதேபோல் எல்லாரும் வெளியே வந்துதான் ஆகணும் ஒருத்தர் மட்டும் தான் ஜெயிக்க போறாங்க.

gayathri
gayathri

நான் மூன்றாம் உலகத்திலிருந்து இதுவரைக்கும் வந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது ஆரம்ப காலகட்டத்தில் நாம் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டென் ஆனால் இவ்வளவு தூரம் வந்ததை  நினைத்து பெருமைப்படுகிறேன் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அனுபவத்தை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது நான் எல்லாரையும் மிஸ் பண்ணுகிறேன்.

இந்த நிலையில் சர்வையர் நிகழ்ச்சிக்கு முன்பும் இப்பொழுது இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment