குணசேகரன் இல்லாமல் எதிர்நீச்சல் டிஆர்பி எவ்வளவு தெரியுமா.? ஏம்பா ஏய் நான் இன்னும் இருக்கேன் மாரிமுத்து பாணியில் பதிலடி.?

ethirneechal trp rating
ethirneechal trp rating

Ethirneechal Trp : எதிர்நீச்சல் சீரியல் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த சீரியலின் முதுகெலும்பாக இருந்தவர் மாரிமுத்து இவர் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அதேபோல் ஒவ்வொரு நாளும் சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லாமல் எபிசோட் இருந்து வந்த நிலையில் திடீரென மாரி முத்து மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இவர் மறைவிற்குப் பிறகு டிஆர்பி யில் பலத்த அடி வாங்கியது எதிர்நீச்சல் சீரியல். இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து மறைந்த பிறகு எதிர்நீச்சல் தொடருக்கான டிஆர்பி ரேட்டிங் தற்பொழுது வெளியாகி உள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவின் கதாபாத்திரம் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் மாரிமுத்து இல்லாமல் முதன்முறையாக டிஆர்பி வெளியாகியுள்ளது.

இந்த வார எபிசோடில் மாரிமுத்துவின் காட்சிகள் இடம்பெறாமல் ஒளிபரப்பப்பட்டது. மாரிமுத்து நடித்த பழைய காட்சிகளை வைத்து ஒரு சில காட்சிகளை ஒளிபரப்பப்பட்டது இதுதான் மாரிமுத்துவின் கடைசி எபிசோடு என சோகத்தில் இருந்தார்கள். சின்னத்திரை தொடர்களில் பலரின் கவனத்தை ஈர்த்த தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல் இந்த சீரியலில் குணசேகரன், நந்தினி, ஆதிரை, கரிகாலன், கதிர், ஜீவானந்தம், பர்கானா என அனைத்து கதாபாத்திரங்களும் தனித்தன்மை மிக்கது.

அதிலும் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பிரபலம் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அவரின் நகைச்சுவை நக்கல் வில்லத்தனம் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. இது சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் நாயகனை விட ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலும் உருவானது.

பொதுவாக வாராவாரம் டிஆர்பி லிஸ்ட் வெளியாகும் இந்த டிஆர்பி லிஸ்டில் கயல் மற்றும் எதிர்நீச்சல் சீரியல் முதலிடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவி வந்தது கடந்த இரண்டு வாரங்களாக எதிர்நீச்சல் சீரியல் முதல் இடம் பெற்று வந்தது. அப்படி இருக்கும் நிலையில் மாரிமுத்துவின் மறைவிற்குப் பிறகு டிஆர்பி பட்டியல் முதன் முறையாக வெளியாகி உள்ளது.

மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலுக்கு மிகவும் பக்கபலமாக இருந்து வந்தார் அவர் இல்லாமல் டிஆர்பி மிகவும் குறையும் என பல விமர்சனங்களை இருந்தது, இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களை போல் இந்த வாரமும் எதிர்நீச்சல் தொடர் 10.79 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது, அதேபோல் கயல் சீரியல் 10.74 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தையும், சுந்தரி சீரியல் 9.79  புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும், நான்காவது இடத்தில் வானத்தைப்போல  சீரியல்  தொடர் 8.82, புள்ளிகளை பெற்றுள்ளது, ஐந்தாவது இடத்தில் இனியா தொடர் 8.2 புள்ளிகள் பெற்றுள்ளது.

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து மறைவுக்கு பிறகு டிஆர்பி ல் அடிவாங்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏன்பா ஏய் நான் இன்னும் இருக்கேன் என குணசேகரன் ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளது.