இன்னையோட உன் கதை க்ளோஸ் டா கதிருக்கு விழும் தர்ம அடி.! ஈஸ்வரியின் முன்னாள் காதலனை குத்திக் காட்டும் குணசேகரன்.. பரபரப்பாகும் எதிர்நீச்சல்

Ethirneechal serial today promo: சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா யாருக்கு தன்னுடைய 40% சொத்தை தருவதாக கூறப்போகும் நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையை போட வேண்டும் என குணசேகரன் கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்து வரும் நிலையில் அதே போல் குணசேகரன் கூறியது போல பிசிறு தட்டாமல் அப்பத்தாவை போட்டுத் தள்ள வேண்டும் என கதிர் முயற்சி செய்கிறார்.

மேலும் ஜீவானந்தத்தையும் சரியான நேரத்தில் பழிவாங்க வேண்டும் என்று நினைத்து வரும் நிலையில் திடீரென ஒரு பெண்ணிடம் வழிந்து வழிந்து பேச ஆரம்பிக்கிறார். இவ்வாறு டார்கெட் மாறினா மொத்த பிளானும் சொதப்பிடும் என கரிகாலன் கூறியும் கதிர் கேட்காமல் அந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் அவரை பார்ப்பதற்காக நேரில் செல்கிறார்.

தளபதி 68 -ல் விஜய்க்கு தங்கையாக நடிக்க 5 நடிகைகளுடன் ஆடிஷன் நடத்திய வெங்கட் பிரபு.. தேர்வான நடிகை யார் தெரியுமா.?

இவ்வாறு செல்லும் இடத்தில் கதிர் வசமாக கௌதமிடம் மாட்டிக் கொள்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது முன்பே கிராமத்தில் நடக்கும் பங்ஷனுக்கு வந்த ஜனனி, அப்பத்தா, சக்தி, ஈஸ்வரி, ரேணுகா மற்றும் ஜான்சிராணி அனைவரும் வெளியில் நின்று கொண்டிருக்க விசாலாட்சி, ஞானம் மற்றும் குணசேகரன் ஆகியோர்கள் வருகின்றனர்.

மறுபுறம் கதிர் அந்தப் பெண்ணை சந்தித்து தனியாக பேசிக்கொண்டு இருக்க இந்த நேரத்தில் கௌதம் தனது அடியாட்களுடன் வருகிறார். அப்பொழுது குணசேகரன் தம்பிதான் என்று கதிர் தனது சட்டை காலரை தூக்கி விட அந்தப் பெண் தள்ளி விடுகிறார். உடனே கௌதம் அடியாட்களுடன் கதிரை வசமாக பிடித்துக் கொள்ள யார் நீ என்று கேட்கிறார் அதற்கு அந்த பெண் மாட்டுனடா நீ என கூறிவிட்டு கிளம்பி விடுகிறார்.

மகிழ் திருமேனி படத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டும் அஜித்.! மிரட்டிவிட்ட 5 படங்கள்

பிறகு குணசேகரனிடம் ஈஸ்வரி அத்தை எதுவும் சொல்லவில்லை என்று சொல்ல அதற்கு குணசேகரன் அத்த சொல்லி தான் உன்னுடைய முன்னாள் காதலனை சிறப்பு விருந்தினராக அழைச்சிருக்கியா என்று கேட்க அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்லுவாங்க அப்படி இருக்கு உன் கதை என அப்பத்தா குணசேகரனை பார்த்து கூறுகிறார்.