ஜான்சியை ஓட விட்டு அழகு பார்க்கும் விசாலாட்சி மருமகள்கள்.. ஜீவானந்தத்தை தாக்க திட்டம் போட்ட கதிர்… எதிர்நீச்சல்

Ethirneechal serial today promo 1: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் குணசேகரன் இல்லாத காரணத்தினால் சீரியல் சுவாரஸ்யம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி கதிர் எப்படியாவது ஜீவானந்தத்தை போட்டுத் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.

அப்பத்தா தனது 40% சொத்து யாருக்கு தரப்போகிறேன் என்பதை கிராமத்தில் நடக்கும் பங்க்ஷனில் தான் கூறுவதாக தெரிவித்துள்ளார். எனவே குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் அந்த பங்க்ஷன்க்கு செல்கின்றனர். இதற்கிடையில் பல பிரச்சனைகள் நடைபெற்று வரும் நிலையில் மருமகள்களுக்கு ஜான்சிராணி குடைச்சல் கொடுத்து வருகிறார்.

எனவே மருமகள்கள் ஜான்சி ராணியை பழிவாங்கி உள்ளார் மேலும் ஈஸ்வரி வெண்பா தன்னுடனே இருக்க வேண்டும் என விரும்ப ஆனால் குணசேகரன் இதுவரையிலும் தனக்கு செய்த உதவிக்கு நன்றி என கூறி பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் கதிர் ஜீவானந்தம் வருவான் சரியாக போட்டு தள்ளிவிட வேண்டும் என அடியால் கில்லியுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு இது குறித்த ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது.  ஈஸ்வரி ஜீவானந்தத்துக்கு போன் போட காரில் இருக்கும் கதிரிடம் கரிகாலன் ஜீவானந்தம் இங்கு வரலினா என்று கேட்க அதற்கு கதிர் வருவான்டா அவன வச்சு அடிக்கிற பாரு என கோபத்துடன் கூறுகிறார். இதனை அடுத்து ஈஸ்வரி ஜீவானந்தத்திடம் வெண்பா என்கூடவே இருக்கட்டும் ப்ளீஸ் என கேட்க ஜீவானந்தம் இதுவரைக்கும் எங்க மேல அக்கரை காட்டுனது போதும் எனக் கூறுகிறார்.

பிறகு சக்தி, ஜனனி, நந்தினி, ரேணுகா என அனைவரும் வந்துவிட ஜனனி அத்த ஏதாச்சும் பிரச்சனை பண்ணுவாங்க கூட்டிட்டு போயிடலாம் என்று சொல்ல அதற்கு நந்தினி இல்லைன்னா உங்க அத்தை எந்த பிரச்சனையும் பண்ண மாட்டாங்களா என்று சொல்லிவிட்டு சக்தி வண்டியை எடு போகும் என்று சொல்ல ஜான்சி ராணி மெதுவாக நடந்து வருகிறார். பிறகு வேண்டும் என்றே ஜான்சி ராணியை விட்டுவிட்டு அனைவரும் காரில் சென்று விட ஜான்சி ராணி ஒடியாற மருமகள்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

Exit mobile version