போட்டு தள்ள ஆள் வைத்த ஜீவானந்தம்.! பழைய காதலை வைத்து ஈஸ்வரியை வார்த்தையால் குத்தி கிழிக்கும் குணசேகரன்…

Ethirneechal serial today promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது நடக்கும் இந்த திருவிழாவில் யாருக்கு என்னவாக போகிறது என்ற எதிர்பார்ப்புடன் சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அதாவது குணசேகரன் ஜீவானந்தத்தை போட்டு தள்ள வேண்டும் என்ற முடிவில் இருந்து வரும் நிலையில் இதற்காக கதிர், கில்லி இருவரும் உதவி செய்து வருகின்றனர். கௌதமிடம் கதிர் சிக்கி தர்ம அடி வாங்கிய பிறகும் இன்னும் ஆட்டம் குறையவில்லை.

42வயதில் தேவசேனாவின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா? பாகுபலியால் உயர்ந்த மார்க்கெட்..

மேலும் மருமகள்களும் குணசேகரன் ஜீவானந்தத்தை எதுவும் செய்து விடக்கூடாது என நினைத்து வருகின்றனர். அப்பத்தா நடக்கும் ஃபங்ஷனுக்கு ஜீவானந்தத்தை சிறப்பு விருந்தினராக அழைத்து இருக்கும் நிலையில் தானாக சிக்கும் ஜீவானந்தத்தை சும்மா விடக்கூடாது என வெறியுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில் அனைவரும் கோவிலுக்கு செல்ல ஈஸ்வரி உடம்பு சரியில்லை என கூறுகிறார். வெண்பாவை ஈஸ்வரி யாருக்கும் தெரியாமல் வைத்திருந்த நிலையில் அவரை ஜீவானந்தத்திடம் ஒப்படைக்க வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறார். தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஈஸ்வரி ஜீவானந்தம் பேசிக் கொண்டிருக்க இந்த நேரத்தில் வரும் குணசேகரன் வணக்கம் ஜீவானந்தம் என்ன ஈஸ்வரி இவரை பார்த்து பேச தான் உடம்பு சரியில்லன்னு பொய் சொன்னியா இன்று பேசிக் கொண்டிருக்க கௌதம் துப்பாக்கி வைத்துக் கொண்டு நிற்கிறார்.

கர்ப்பமே இல்லாத ஐஸ்வர்யாவிற்கு சீர்வரிசை செய்ய ஆசைப்படும் கோடீஸ்வரி.. வீட்டில் நடக்கும் பிரச்னையை தெரிந்து கொண்ட மகா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

இதனை போன் பேசிக் கொண்டே இருக்கும் கதிர் பார்த்து விட பிறகு ஜீவானந்தத்திடம் ஈஸ்வரியின் மகள் வெண்பா எங்க அம்மாவ அம்மா என்று கூப்பிடுகிறார். நான் உங்களை அப்பானு கூப்பிடலாமா எனக் கூறி ஜீவானந்தத்தின் தோல் மேல் சாய்ந்து கண் கலங்குகிறார்.