Ethirneechal : எதிர்நீச்சல் சீரியலை தூக்கி நிறுத்துவதே இவங்கதான்.! யாருப்பா சாமி..

Ethirneechal : சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் குணசேகரன் மற்றும் கரிகாலன் ஆகிய கதாபாத்திரமில்லை என்றால் எதிர்நீச்சல் சீரியல் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் ஒரு சில சீரியலுக்கு ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் சன் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் இரவு ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பப்படும் எதிர்நீச்சல் சீரியல் அதிக அளவில் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. எதிர்நீச்சல் சீரியல் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கூட அதிக விருதை வாங்கி சென்றது.

அதுமட்டுமில்லாமல் எதிர்நீச்சல் சீரியல் இன்று இரவு ஒளிபரப்பப்பட போகிறது என்றால் அதன் ப்ரோமோ வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள் அந்த புரோமோ வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது ஒவ்வொரு வாரமும் வெளியாகும் முன்னோட்ட வீடியோ வீடியோவை பார்த்து ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஒரு சில ரசிகர்கள் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் குணசேகரன் மற்றும் கரிகாலனாக கதாபாத்திரம் இல்லை என்றால் எதிர்நீச்சல் சீரியல் சுவாரஸ்யமே இல்லாமல் இருக்கும் என கூறியுள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் குணசேகரன் கதாபாத்திரத்தில் ஜிபி மாரிமுத்துவும் கரிகாலன் கதாபாத்திரத்தில் விமல் குமாரும் நடித்து வருகிறார்கள்.

ஆதிரை கரிகாலன் கட்டாய திருமண காட்சிகள் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட காட்சிகளாக பார்க்கப்படுகிறது கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம் தான் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார் அதேபோல் கோலங்கள் சீரியலில் நடித்து வந்த ஸ்ரீவித்யா வசனம் எழுதுகிறார் எதிர்நீச்சல் சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

Leave a Comment