ஜீவானந்தத்தின் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்த ஈஸ்வரி.! குணசேகரன் பார்க்கணுமா வேணாமா கதிரிடம் கேட்கும் நபர் எதிர்நீச்சல் இன்றைய பரபரப்பான எபிசோட்.

ethirneechal september 23
ethirneechal september 23

ethirneechal september 23 promo : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலின் முதுகெலும்பாக இருந்தவர் குணசேகரன் ஆனால் இவர் திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார் அதனால் குணசேகரன் கதாபாத்திரத்தை தற்பொழுது காமிக்காமல் கதையை வேறொரு கோணத்தில் நகர்த்தி செல்கிறார் எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர்.

இந்த நிலையில் ஜனனி கடைசி மருமகளாக வருகிறார் அந்த வீட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்கிறார் அதனால் மற்ற பெண்களும் தங்களுக்கான உரிமையை கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள் இப்படி சுவாரசியங்களுடன் நகர்ந்து செல்லும் எதிர்நீச்சலில் அடுத்ததாக சொத்து டார்கெட் வைத்தார்கள் ஆனால் குணசேகரன் மொத்த சொத்தையும் ஆட்டைய போடலாம் என நினைத்தார் அதற்கு எதிர்மறையாக சொத்து அனைத்தும் ஜீவானந்தத்தின் பெயரில் மாறிவிட்டது.

அப்படி இருக்க சொத்தை  எப்படியாவது அடைந்தாக வேண்டும் என ஜீவானந்தத்தை போட்டு தள்ள குணசேகரன் கதிர் முடிவு செய்கிறார்கள் அதன் விளைவாக ஜீவானந்தத்தின் மனைவியை குணசேகரன் மற்றும் கதிர் கொன்று விடுகிறார்கள் இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்தார்கள் ஆனால் திடீரென வீட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது.

ஆனால் அப்பத்தா கண் விழித்த பிறகு ஜீவானந்தத்திற்கு உறுதுணையாக இருக்கிறார். இந்த நிலையில் ஜீவானந்ததுக்காக குணசேகரன் மீது அப்பத்தா போலீசில் கேஸ் கொடுக்கிறார் உடனே குணசேகரன் லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு கிளம்புகிறார். ஆனால் இந்த சீரியலில் குணசேகரனுக்கு ஒரு அண்ணன் இருப்பது போல் காட்சிகள் நகர்த்தப்பட்டு வருகிறது ஆதிபகவன் மிகவும் மோசமானவர் எனவும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்திய ப்ரோமோவில் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வீட்டிற்கு ஒரு கார் வருகிறது அதை பார்த்த வீட்டு பெண்கள் பயப்படுகிறார்கள் அதேபோல் யாராக இருக்கும் என அனைவரும் யோசித்துக் கொண்டிருந்தார்கள் இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ வந்துள்ளது இந்த பிரமோ வீடியோவில் ஈஸ்வரி ஜீவானந்தத்தின் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அப்பத்தா யார் இந்த குழந்தை எனக் கேட்க அது  பிரண்டோட குழந்தை பியூச்சர் பிரிண்ட் நமக்கு  என வீட்டு பெண்கள் கூறுகிறார்கள் கதிர் குணசேகரனை தேடி செல்கிறார் அங்கு ஒருவர் ஏன் ப்பா ஏய் நில்லு குணசேகரனை பார்க்கணுமா இல்லையா என கேட்கிறார் ஒருவேளை அடுத்த குணசேகரனை சீரியல் குழு காண்பிக்கப் போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.