ஆதி குணசேகரன் குரலுக்கு தற்பொழுது டப்பிங் கொடுப்பவர் இவர்தானா.? மாரிமுத்துவுக்கும் இவருக்கும் என்ன கனெக்ஷன்..

Ethirneechal marimuthu : சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல் தான் எதிர்நீச்சல் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் டிஆர்பி யில் முதலிடத்தில் இருந்து வந்தது எதிர்நீச்சல் இந்த சீரியலில் குணசேகரன் மறைந்த பிறகு டிஆர்பி யில் தடம் தெரியாமல் போய்விட்டது எதிர்நீச்சல் சீரியல். எதிர்நீச்சல் தூணாக நடித்து வந்தவர் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மாரிமுத்து தான்.

இவர் டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போது தனக்குள் ஏதோ நிகழ்கிறது என உணர்ந்து ஹாஸ்பிடலுக்கு செல்ல முயற்சி செய்துள்ளார் பின்பு ஹாஸ்பிடலுக்கு போன மாரிமுத்துவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார் இவரின் இறப்பு ஒட்டுமொத்த எதிர்நீச்சல் ரசிகர்களையும் சினிமாபிரபலங்களையும் சோகத்தில் அழுத்தியது. ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து மறைந்து விட்டதால் அந்த இடத்தை யார் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது.

இதற்கு வேலா ராமமூர்த்தி பக்காவாக பொருந்துவார் என பலரும் கூறிவந்த நிலையில் வேலா ராமமூர்த்தியை சீரியல் குழு அனுகியுள்ளது ஆனால் வேலா ராமமூர்த்தி பாடத்தில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருப்பதால் தேதி கொடுப்பதில் சிக்கல் இருப்பதாக அவர் கூறிவிட்டார் அதனால் இன்னும் அவரிடம் பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது. இதற்கு இடையில் வேறு சில நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

குணசேகரன் கதாபாத்திரத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு வெங்கட் ஜனா தான் டப்பிங் கொடுத்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் இவர் குணசேகரன் இயக்கிய கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்திற்கு டப்பிங் கொடுத்தவர். இவர் பேசுகையில் பரணி ஸ்டுடியோவில் தான் எதிர்நீச்சல் டப்பிங் நடைபெற்று வருகிறது அப்பொழுது காமெடியான கதாபாத்திரங்கள் எக்ஸ்பிளைன் பண்ணினார்கள் அவர் பேசிய வாய்ஸ் நான் பேசும் பொழுது எனக்கு சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது.

அதுமட்டுமில்லாமல் அவர் செத்த அன்று இரவே டப்பிங் பேசியதாக அவர் கூறியுள்ளார் இது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.