நீ உழைச்சி சம்பாதித்த சொத்து இது கிடையாது.. குணசேகரனை கதிகலங்க வைத்த ஜீவானந்தம்.! வழக்கம்போல் முட்டாளாக இருக்கும் ஜனனி..

Ethirneechal; சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்பொழுது ஜீவானந்தம் அப்பத்தாவின் 40% சொத்தை தன்னுடைய பெயரில் எழுதி இருக்கும் நிலையில் அனைவருக்கும் தெரிய வர குணசேகரன் இதனால் கதி கலங்கி நிற்கிறார். அதாவது ஆடிட்டர் குணசேகரனுக்கு போன் செய்து அப்பத்தாவின் சொத்தை வேறு ஒரு பெயரில் இருப்பதாகவும் ஆபீஸில் உரிமை கொண்டாடுவதாகவும் கூறிய நிலையில் உடனே குணசேகரன் கிளம்புகிறார்.

அங்கு ஆபீஸில் இருக்கும் அனைவரையும் ஜீவானந்தம் வெளியில் அனுப்பி வைத்துவிட என்ன நடக்குது என்று ஒன்னும் புரியவில்லை. பிறகு குணசேகரன் சண்டை போட்டுக் கொண்டிருக்க ஜீவானந்தம் உடனே நீ உழைத்து சம்பாதித்த சொத்து கிடையாது குறுக்கு புத்தியில் மிரட்டி மற்றவர்களிடம் இருந்து அபகரித்து சேர்த்த சொத்து என்று கூறுகிறார்.

இதனை எல்லாம் கேட்ட உடன் குணசேகரனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கண்கலங்கி நிற்க ஜீவானந்தம் குணசேகருக்கு எதிராக பேசியது என்னடா நமக்கு வந்த சோதனை என்று சரியான பல்பு வாங்கிக் கொண்டார். இவ்வாறு குணசேகரனின் இப்படிப்பட்ட சொத்தை ஜீவானந்தம் ஆட்டையை போட்டு போட்டிருப்பது சகித்துக் கொள்ள முடியவில்லை அதுவே ஒரு களவாணி சொத்து.

இவ்வாறு நடப்பதை எல்லாம் ஜனனி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர் என்ன செய்யப் போகிறார் என்பதே தெரியவில்லை. அப்பத்தாவின் சொத்து என்று உரிமைக்காக போராடுவாரா? இல்ல ஜீவானந்தத்தின் பக்கம் நியாயம் என அவருக்கு உதவி செய்ய இருக்கிறாரா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு குணசேகரன், ஜனனி இரண்டு முட்டாள்களுக்கும் ஜீவானந்தம் மிகப்பெரிய ஆப்பு வைத்துள்ளார். குணசேகரன் தொடர்ந்து அடியாட்களை வைத்து தான் மிரட்டி சொத்தை பிடுங்கி வந்த நிலையில் எனவே ஜீவானந்தம் முள்ள முள்ளால் தான் எடுக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.

Leave a Comment