நான் 10-வது படிக்கும் பொழுது அது எனக்கு நடந்தது.. கசப்பான அனுபவம் பற்றி பேசிய ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை……

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் தான் கேபிரில்லா இவர் 2012 ஆம் ஆண்டு தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகிய மூன்று என்ற திரைப்படத்தில் சுருதிஹாசன் அவர்களுக்கு தங்கையாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்திற்கு பிறகு சமுத்திரகனியின் அப்பா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இப்படி தொடர்ந்து நடித்து வரும் கேப்ரில்லா தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார் இந்த சீரியலில் இவரின் நடிப்பு ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் அழுவது போல் கேரக்டராக இருந்தாலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் பற்றி பேசி உள்ளார் அவர் கூறியதாவது தான் பத்தாவது படிக்கும் பொழுது அந்த கசப்பான அனுப்பவும் நடைபெற்றது அந்த சமயத்தில் என்னிடம் போன் கூட இல்லை நான் அதிகமாக படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன் ஆனாலும் என்னுடைய புகைப்படத்தை எடுத்து யாரோ ஒருவர் மார்பிங் செய்து அதனை வெளியிட்டார்கள்.

ஆனால் அந்த புகைப்படத்தில் இருந்தது நான் கிடையாது ஒருவேளை நானா இருக்குமோ என்று தோன்றும் அளவிற்கு அந்த புகைப்படம் என்னை போல சித்தரித்த வெளியிடப்பட்டிருந்தது இந்த சம்பவம் என்னை ரொம்பவும் பாதித்தது மூன்று நாட்களுக்கு பள்ளிக்கே செல்லவில்லை பள்ளியில் என்னை அப்படி பார்த்தார்கள் அந்த சமயங்கள் நான் ரொம்பவும் கஷ்டப்பட்டேன் என கேப்ரில்லா தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.