திரை உலகில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர், நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் பட வாய்ப்புக்காக அங்குமிங்கும் அலைந்து பலரிடம் வாய்ப்பு கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வெளிப்படுத்தி இப்போ முன்னணி நடிகர், நடிகைகள் இடத்தை பிடிக்கின்றனர் இதற்காக அவர்கள் பல இடத்தில் அசிங்கங்களையும் அவமானங்களையும் சந்தித்ததும்..
உண்டு ஒரு சிலர் வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள் ஒரு சிலர் அதை சொல்லாமல் பெருந்தன்மையாக போய்விடுகின்றனர். அப்படி ஒரு பிரபலம் திரை உலகில் பட்ட அவமானங்களை வெளிப்படையாக கூறியுள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் ஜெகபதிபாபு இவர் இதுவரை 170 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் இதுவரை அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார். தமிழில் இவர் அஜித்தின் விசுவாசம், விஜயின் பைரவா, ரஜினியின் அண்ணாத்த என அடுத்தடுத்த படங்களில் ஜெகபதி பாபு நடித்த தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு வில்லனாக தன்னை உருவாக்கிக் கொண்டார்.
இப்படி திரையுலகில் ஜொலித்த ஜெகபதி பாபு தனது சினிமா ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்களை பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது.. 1992 ஆம் ஆண்டு நடிகர் ஜெகபதி பாபு ஒரு தெலுங்கு படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு பொழுது அவர் நிறைய அவமானங்களை சந்தித்திருக்கிறார். அந்தப் படத்தில் நடித்ததற்காக ஜெகபதிபாபு சம்பளம் கொடுக்கவில்லையாம் பத்து நாட்களுக்கு மேலாக சாப்பாடு கொடுக்கவில்லை..
ஒரு கட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த லைட் மேன் ஒருவர் தனக்கு கொடுக்கப்பட்ட சாப்பாட்டை ஜெகபதி பாபுவுக்கு கொடுத்திருக்கிறார் இப்படி ரொம்ப கஷ்டப்பட்ட ஜெகபதிபாபு பின் தெலுங்கு சினிமாவே வேண்டாம் என கருதி பிற மொழிகளில் நடிக்க தொடங்கினார் இப்பொழுது அவர் இந்திய அளவில் முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.