‘ஜெயிலர்’ படம் உருவாகுவதற்கு அடித்தளமாக இருந்த விஜய்.. உண்மையை உடைத்த நெல்சன்

jailer
jailer

Jailer movie: நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துக் கொண்டு பேசிய இயக்குனர் நெல்சன் விஜய் குறித்து பேசி இருப்பது தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு துவங்கி இருக்கிறது. அதற்கு அடித்தளமாக நேற்று ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் பட குழுவினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற நம் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சோசியல் மீடியாவில் செம ஹிட் அடித்துள்ளது. அப்படி முதல் பாடலான காவாலா பாடல் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றினை பெற்றிருக்கும் நிலையில் இதனைத் தொடர்ந்து ஹுக்கும், ஜுஜுபி போன்ற பாடல்களும் மாஸ் ஹிட் அடித்துள்ளது.

நேற்று இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடந்த நிலையில் அதில் கலந்துக் கொண்ட ரஜினி, நெல்சன், கலாநிதி மாறன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பல விஷயங்களை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தனர். அந்த வகையில் இயக்குனர் நெல்சன் வெளிப்படையாக பல விஷயங்களை பகிர்ந்த நிலையில் அதில் பீஸ்ட் படம் வெளியான பிறகு தான் நெகட்டிவ் மைண்ட் செட்டில் இருந்ததாகவும், எங்கே என்னை ஜெயிலர் படத்தை விட்டு நீக்கிவிடுவார்களோ என்ற பயத்தில் நான் இருந்தேன் எனவும் கூறினார்.

அதன் பிறகு தான் தலைவர் கொடுத்த நம்பிக்கையின் காரணமாக  ஜெயிலர் படத்தை இயக்க முடிந்தது என்றார். மேலும் நான் ரஜினியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்தது விஜய் தான் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் பொழுது நான் ரஜினியை சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் ரஜினியை சந்தித்து கதை சொல்ல மிகவும் தயங்கினேன் ஆனால் விஜய் போய் கதை சொல்லுயா நல்லா தைரியம் கொடுத்த அனுப்பி வைத்ததாக கூறியிருக்கிறார்.