ஜோதிகாவுக்காக அசினை நிராகரித்த சூர்யா.. பறிக்கப்பட்ட சூப்பர் ஹிட் பட வாய்ப்பு

Surya: நடிகர் சூர்யா அசின் நடிக்க வேண்டிய கேரக்டரில் ஜோதிகாவை நடிக்க வைத்துள்ளார் இதனால் ஹிட் படத்தின் வாய்ப்பு அசினுக்கு பறிபோனதாக செய்யாறு பாலு கூறியுள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் கலந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயின் ஆக நடிகை அசின் அறிமுகமானார்.

கேரள பெண்ணாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர அசினுக்கு பட வாய்ப்புகள் குவிந்துள்ளது. அப்படி விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கமல் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். அந்த வகையில் மஜா, சிவகாசி, போக்கிரி, ஆழ்வார், வேல், தசாவதாரம் போன்ற படங்கள் ஹிட் அடித்தது. இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவுடன் கஜினி திரைப்படத்தில் கல்பனா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டது இதன் மூலம் பாலிவுட்டிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

பிக் பாஸ் 7-ல் தெறிக்க விடும் அர்ச்சனாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.! வைரல் புகைப்படம்

எனவே ஹிந்தி முன்னணி நடிகர்களான அமீர்கான், சல்மான்கான், அக்ஷய் குமார் போன்ற நடிகர்களுக்கு ஜோடி போட்டு சினிமாவில் புகழின் உச்சத்தை அடைந்தார். பிறகு 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார் ஆசின்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் அசின் குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்க முதலில் அசினிடம் தான் பேச்சுவார்த்தை நடந்தது இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்றும் அதில் அசினுக்கு ஐஷு கேரக்டர் என்றும் கூறினார்கள்.

சாப்பாட்டில் பல்லி கடந்ததை பார்த்து அதிர்ச்சியான முத்து.. இதுதான் சரியான நேரம் என மீனாவை வச்சி செய்யும் விஜயா – சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ஆனால் அசின் தனக்கு ஜோதிகா நடித்த குந்தவை கேரக்டர் தான் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் பட குழுவினர்கள் அந்த கேரக்டரில் ஜோதிகா தான் நடிக்க வேண்டும் என்று சூரியா திட்டவட்டமாக இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் அசின் குந்தவை கேரக்டர் என்றால் நடிக்கிறேன் மற்ற கேரக்டர் என்றால் வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். இந்த கேரக்டரில் ஜோதிகா தான் நடிக்க வேண்டும் என்று சூர்யா உறுதியாக இருந்ததால் அதில் அசின் நடிக்கவில்லை அதன் பிறகு இதில் பூமிகா நடித்தார் என்று தெரிவித்துள்ளார்.