பாம்பு நேரங்காலம் பாக்காது கொத்தும்.. நயன்தாரா படத்தில் நடிக்காதே சமந்தாவை வான் பண்ணிய பிரபலங்கள்

Samantha : சினிமாவில் திறமையும், அழகையும் தொடர்ந்து காட்டி ஜொலித்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான  சாகுந்தலம், குஷி போன்ற படங்கள் சுமாராக ஓடிய நிலையில் அடுத்தடுத்த புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தாவிடம்  சாகுந்தலம் படத்தில் நீங்கள் ஹீரோயினாக நடித்தீர்கள்..

ஆனால் உங்கள் கதாபாத்திரத்திற்கு நிகராக இன்னொரு கதாபாத்திரத்தில் ஹீரோயின் அதிதி பாலன் நடித்திருந்தார். இது எப்படி.? உங்களுக்கு தெரியாமல் நடந்து விட்டதா என கேள்வி எழுப்பி உள்ளனர்  சமந்தா பதில் சொல்லி உள்ளார். நான் கீர்த்தி சுரேஷின் மகாநடி திரைப்படத்தில் நடிக்கவில்லையா எனக்கு புரியவில்லை..

Thalapathy 68 : ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியான புதிய புகைப்படம்.! யார் யார் இருக்காங்க பாருங்கள்..

ஏன் ஒரு நடிகை இன்னொரு முன்னணி நடிகையின் படத்தில் நடிக்க கூடாது என்று கூறுகிறீர்கள் இன்னும் சொல்லப்போனால் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயின் நான் இரண்டாவது ஹீரோயின் என்று கூறினார்கள் நான் ஒப்புக்கொண்டேன். அப்பொழுது என்னுடைய கதாபாத்திரத்தை நயன்தாரா டம்மியாக்கி  விடுவார் இந்த பழக்கம் நடிகை நயன்தாராவுக்கு இருக்கிறது.

இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் படம் என்றால் இரண்டாவது ஹீரோயினை நயன்தாரா டம்மி ஆக்கி விடுவார் என்று என்னை நடிக்க வேண்டாம் என சிலர் கூறினார்கள் ஆனால் நான் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. படப்பிடிப்பு தளத்தில் எனக்கு துணையாக இருந்தார். அந்த படத்தின் நடித்ததற்கு பெருமைப்படுகிறேன்.

அர்ச்சனாவை ரவுண்டு கட்டிய ஹவுஸ் மெட்ஸ்கள்.! ஒருத்தவங்களோட வீக்னஸ் தெரிஞ்சுக்கிட்டு அதை குத்தி குத்தி காட்டுறது தான் உங்களோடைய பொழப்பே..

என்னுடைய கதாபாத்திரத்தில் நல்ல ஸ்கோப் இருந்தது இது ஒரு நல்ல முன்னெடுப்பு என்று நான் கருதுகிறேன். இன்னொருவர் இந்த படத்தில் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறுவது வியப்பாக உள்ளது.. அவரவர் கதாபாத்திரம் எப்படி இருக்கிறது அது தங்களுக்கு நிறைவாக இருக்கிறதா என்று பார்த்தாலே போதுமானது என நடிகை சமந்தா கூறி உள்ளார்.