விளையாட வந்தீங்களா சாப்ட வந்தீங்களா அப்ரசண்டிங்களா.. சில்வண்டு சாச்சனா இதுக்கு வெளியிலேயே இருந்திருக்கலாம், பிக்பாஸ் 8

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரோமோக்கள் சாப்பாட்டு சண்டை பற்றியதாக இருக்கிறது. ஒரு மணி நேர எபிசோடில் இது காட்டவில்லை என்றாலும் 24 மணி நேர காட்சிகளில் ஆடியன்ஸ் பார்த்துவிட்டனர்.

அது இப்போது சோஷியல் மீடியாக்களிலும் வைரலாகி வருகிறது. அன்ஷிதா செய்த சம்மந்தி எங்களுக்கு கிடைக்கவில்லை என தர்ஷா சாச்சனா ஒரு பக்கம் குறை சொல்கின்றனர். இதில் சில்வண்டு சாச்சனா ஒரு படி மேலே போய் தேம்பித் தேம்பி அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தது.

அதிலும் சாப்பாடை கீழே கொட்ட போனதெல்லாம் ரொம்ப ஓவர். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரையில் உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். ஆனால் சாப்பாடு அங்கு இருப்பதைத்தான் சாப்பிட வேண்டும் இதுதான் விளையாட்டின் முக்கிய விதி.

ஆனால் எதற்கு வந்தோம் என்றே தெரியாமல் சாப்பாடு முட்டை என இந்த கூட்டம் அடித்துக் கொள்கிறது. இதை நிச்சயம் விஜய் சேதுபதி இன்று கண்டிப்பார் என தெரிகிறது அதில் ரீல் மகளுக்கு எக்ஸ்ட்ராவாக கொஞ்சம் திட்டு விழவும் வாய்ப்பு இருக்கிறது.

இதில் நான் சுத்த சைவம் முட்டை சாப்பிட மாட்டேன் வெங்காயம் பூண்டு சாப்பிட மாட்டேன் என ஆரம்பத்தில் சாச்சனா அளந்துவிட்டார். ஆனால் இப்போது பார்த்தால் வீட்டுக்கு தெரியாமல் சாப்பிடுகிறேன் கேமராவில் காட்டி விடாதீர்கள் என்று சொல்கிறார்.

இதிலிருந்து இவர் எந்த அளவுக்கு நடிக்கிறார் என வெளிப்படையாக தெரிகிறது. தற்போது பார்வையாளர்களின் மொத்த விருப்பம் இவர் மீது திரும்பி இருக்கிறது. அதனால் அடுத்த வாரம் இந்த சின்ன பாப்பா வீட்டை விட்டு வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Exit mobile version