பாயிண்ட் பாக்கியலட்சுமியாக மாறிய பெண்கள் அணி.. ஒரே வார்த்தையில் மடக்கிய முத்து, பிக்பாஸ் 8

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பெண்கள் ஆண்கள் அணிக்குள் நிச்சயம் ஏதோ ஒரு கலவரம் நடக்கப்போவது மட்டும் உறுதி. கடந்த வாரம் அருண் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஆண்கள் அணியின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.

இதுவரை பெண்கள் அணியிலிருந்து யாரும் வெளியேறவில்லை. அதையே சாதகமாக எடுத்துக் கொண்ட கேர்ள்ஸ் டீம் தற்போது ஆண்களை ஏமாற்றும் வேளையில் இறங்கி இருக்கின்றனர்.

அதாவது நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் குறிப்பிட்ட படுக்கை அறையை பயன்படுத்திக் கொள்ள பெண்களுக்கு பாய்ஸ் டீம் ஒரு கண்டிஷன் போட்டது. அதன்படி ஒரு வாரம் எங்கள் யாரையும் நீங்கள் நாமினேட் செய்யக்கூடாது என்றனர்.

பெண்கள் அணியும் அதை ஏற்றுக் கொண்டு படுக்கையறையை கைப்பற்றினார்கள். அதன்படி அடுத்த வாரத்தில் இந்த டீலை உபயோகப்படுத்த முடிவு செய்து இருக்கிறது.

ஆனால் எப்படியாவது அதை காலி செய்ய வேண்டும் என பெண்கள் அணி தற்போது மகா மோசமான ஒரு திட்டம் தீட்டியிருக்கிறது. அதாவது சாச்சனா வயிறு வலி காரணமாக மருத்துவரை பார்க்க சென்றார். அவருக்கு அருண் உதவினார்.

ஆனால் கன்பெஷன் ரூமுக்கு ஆண்கள் தன் தேவைக்காக போனால் இந்த டீல் கேன்சல் ஆகிவிடும் என கண்டிஷன் இருக்கிறது. தற்போது இதை வைத்து இந்த டீலை முடித்து விடலாம் என ஆனந்தி உட்பட பெண்கள் அணி வில்லங்கமாக யோசித்துள்ளனர்.

இதை ஆண்களிடம் சொன்னபோது அவர்கள் எங்களுடைய தேவைக்காக போகவில்லை என கூறினார்கள். ஆனால் பெண்கள் அணி கேட்பதாக இல்லை. அவர்களை அடக்கும் விதமாக உங்களுடைய கண்டிஷன் எங்களுடைய தேவைக்காக போக கூடாது என்பதுதான்.

அருண் சாச்சனாவுக்கு உதவி செய்யத்தான் சென்றார். இது ஒரு மனிதாபிமானம் மனசாட்சி அடிப்படையில் தான். இதை சொல்லிக் கொடுத்ததே நீங்கள் தான். தற்போது அதை வைத்து எங்களை கார்னர் செய்வது நியாயமா என முத்து சரியாக மடக்கினார்.

இதனால் பெண்கள் அணி திருட்டு முழி முழித்தார்கள். இருந்தாலும் ஆனந்தி பாயிண்ட் பாக்கியலட்சுமி ஆக மாறி சில விஷயங்களை கூறினார். ஆனாலும் தற்போது பார்வையாளர்களின் ஆதரவு ஆண்கள் அணிக்குத்தான்.