அவ சில்ற பையன்.. செருப்பால அடிப்பேன்.! தொடர்ந்து கேவலமாக நடந்து கொள்ளும் பிரதீப்.. உச்சகட்ட கோபத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள்

Bigg Boss season 7 Tamil today promo 2: பிரதீப் தொடர்ந்து போட்டியாளர்களிடம் மிகவும் தவறாக பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனை கமல்ஹாசன் ஏற்கனவே பலமுறை எச்சரித்தும் மீண்டும் தொடர்ந்து செய்து வருவதனால் ரசிகர்கள் கடுப்பில் இருந்து வருகின்றனர். பிரதீப் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு ஓவராக ஆட்டம் போட்டு வருகிறார்.

எனவே இரண்டு நாட்களாக இவர் நடந்து கொள்வதை பார்க்கும் பொழுது இவரை தான் எலிமினேட் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது ஐந்து பேர் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வார கேப்டன் ஆன பூர்ணிமா வைல்ட் கார்டு போட்டியாளர்கள் ஐந்து பேருடன் விசித்ராவையும் சேர்த்து ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

பிரபாவை போராடி வெளியே எடுத்த விஜய்.. மகாவை ஆச்சரியப்படுத்திய ராஜலட்சுமி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடு

எனவே ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரையும் டார்கெட் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்கள். இந்த சூழலில் இன்றைய முதல் ப்ரோமோவில் பிரதீப் எல்லை மீறி கூல் சுரேஷிடம் பேசியதை பார்த்தோம் இதனால் கடுப்பான கூல் சுரேஷ் வீட்டை விட்டு கிளம்புவதாக தனது துணிமணிகளை எடுத்துக் கொண்டு ஓடினார்.

இதனை பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தடுத்து நிறுத்தினர் இதனை அடுத்து மீண்டும் பிரதீப் ஸ்கூல் சுரேஷ் பற்றி தவறாக பேசியுள்ளார். இதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது அதில் விஷ்ணுவிடம் பேசிக் கொண்டிருக்கும் பிரதீப் ஒரு கட்டத்தில் ஸ்கூல் சுரேஷை சில்ற பையன் டா அவன் என சொல்ல அதற்கு கூல் சுரேஷ் வாடா போடானுலா பேசாத எனக் கூறுகிறார்.

மார்க் ஆண்டனி முதல் போர் தொழில் வரை.. தீபாவளி ஸ்பெஷலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய படங்களின் லிஸ்ட்

பிறகு செருப்பால அடிப்பியா அடிடா அடிடா என்று கூல் சுரேஷ் கத்த அனைவரும் நீ பண்றது ரொம்பவும் தவறு பிரதீப் என்று கூறுகின்றனர். அதற்கு பரவாயில்லை என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார் அப்பொழுது கூல் சுரேஷ் அனைவரிடமும் அப்பனா அசிங்க அசிங்கமா கேட்பான் நீங்க பேசாமா இருப்பீங்க அப்படித்தானே என்று சொல்ல ஒரே ஒரு சாரி கட்டிங்னா போதும் என்று கூற அதற்கு உன் வேலையை பார்த்துட்டுப் போமா என்று பிரதீப் கூறுகிறார். இவ்வாறு தவறு என்று தெரிந்தும் பிரதீப் அனைவரையும் எதிர்த்து கடுமையாக நடந்து கொள்வது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.