பிக் பாஸ் வீட்டில் முதல் தலைவர் இவரா.! போட்டியாளர்களை பாடா படுத்த போகிறாரோ..

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது இந்த நிகழ்ச்சியையும் கமல்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமிதா மாரிமுத்து திடீரென விலகி விட்டார்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இதுவரை தலைவர்கள் யாரும் இல்லாமல் அனைவரையும் பிக்பாஸ் வழிநடத்தினார். அப்படியிருக்கும் நிலையில் தற்போது தலைவரை தேர்வு செய்வதற்காக ஒரு புதிய டாஸ்க் வைத்தார்கள். அதாவது 18 போட்டியாளர்களின் பின்னால் ஒரு பலூன் கட்டி விடப்பட்டுள்ளது. அந்த பலூனை உடைப்பதற்காக ஒரு ஊசி இரண்டு இடத்தில் பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பீப் சவுண்ட் வந்தவுடன் அந்த ஊசியை எடுத்து யார் வேண்டுமென்றாலும் பலூனை உடைத்து விடலாம் பலுனுடைந்தவர்கள் கேமை விட்டு வெளியே செல்ல வேண்டும் இதுதான் ரூல்ஸ். அப்படி ஒருவரும் பலூனை உடைத்து  பலரும் கேமை விட்டு வெளியே சென்றார்கள். கடைசியாக சின்னப்பொண்ணு மற்றும் தாமரை இருவரும் விளையாடினார்கள்.

பிப் அடித்தவுடன் தாமரை ஊசியை எடுத்து விட்டார் சின்ன பொண்ணு தனது பலுனை காப்பாற்றிக்கொள்ள பின்னாடியே சென்று ஆனால் எதிர்பாராத விதமாக வெடித்தது அதனால் இந்த வாரம் தலைவராக தாமரை தேர் வாகினார். ஏற்கனவே தாமரை மீது ஒரு சிலர் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.

அதனால் இந்த வாரம் தாமரைக் கையில் மீதமுள்ள போட்டியாளர்கள் அதனால்  இனி தாமரையின் ஆட்டம் ஆரம்பமாகிறது. பிக் பாஸ் இந்த வார தலைவர் தாமரைக்கு வாழ்த்துக் கூறினார்.

dhamarai

Leave a Comment

Exit mobile version