பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பட வாய்ப்பை வீணடித்த பிக்பாஸ் ராஜூ.! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாத பல பிரபலங்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவர் மத்தியிலும் நல்ல ரீச் அடைந்து அவரது கேரியரில் சிறந்து பயணிக்கின்றனர். அந்தவகையில் கடந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ராஜூ ஜெயமோகன்.

இவர் சின்னத்திரை சீரியல் நடிகர் ஆவார் கனா காணும் காலங்கள், நாம்இருவர்நமக்குஇருவர் போன்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். ஆனால் இவருக்கு சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் தன்னை அறிமுகப்படுத்தி நிலைநாட்ட வேண்டும் என்பதே ஆசையாக சுற்றித்திரிந்தார்.

அதனால் ஒரு கட்டத்தில் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்க அதை பயன்படுத்தி மக்களை என்டர்டெயின்மென்ட் செய்து இந்த நிகழ்ச்சியின் இறுதியில் டைட்டில் வின் செய்து ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள பரிசுத் தொகையும் பெற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் கால்தடம் பதித்தார் என நினைத்த நிலையில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத..

பட்சத்தில் விஜய் டிவியில் பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இந்தநிலையில் ராஜூ ஜெயமோகன் குறித்து ஒரு தகவல் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி பரவி வருகிறது அது என்னவென்றால் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நண்பன் திரைப்படத்தில் மில்லிமீட்டர் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ராஜுக்கு தான் வாய்ப்பு கிடைத்ததாம்.

ஏனோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு பின்பு தவறிப் போய் விட்டதாக தற்போது தகவல் வெளியாகி வருகின்றன. மேலும் இது அனைத்து நடிகர்கள் வாழ்க்கையிலும் நடக்கின்ற சகஜமான ஒன்றுதான்.பல டாப் நடிகர்களுக்கும் கால்ஷீட் பிரச்னையால் பல முக்கிய படங்களில் நடிக்க முடியாமல் போவது சாதாரண ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment