சொந்த பொண்டாட்டியை விட முல்லையை அழகாக பார்த்துக் கொள்ளும் கதிர்.! புலம்பும் மீனா.

விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக சுவாரசியமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்பொழுது முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தினால் குழந்தை பாக்கியம் பெற்று தரவேண்டும் என்பதற்காக குடும்பத்தில் உள்ளவர்கள் செயற்கை முறையில் குழந்தையை பிறக்க வைத்து விடலாம் என்று போராடி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது மருத்துவமனைக்கு சென்று இருந்தார்கள் அப்பொழுது மருத்துவர் 5 லட்சம் ஆகும் என்று கூறியதும் வீடு கட்டுவதற்கு என்று   ரெடி செய்து வைத்திருந்த பணத்தை தற்பொழுது முல்லையின் மருத்துவச் செலவை செய்து வருகிறார்கள். அதோடு முக்கியமாக இந்த ஐந்து லட்சமும் வட்டிக்கு வாங்கிய பணம் என்பது  குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் முல்லையை மிகவும் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டுமென்று கதிரிடம் கூறியதால் முல்லையை அவ்வளவு அழகாக பார்த்துக் கொள்கிறான். பிள்ளையை நடக்க கூட விடாமல் எங்கு சென்றாலும் தூக்கிக்கொண்டு தன் செல்கிறான், அதோடு முல்லைக்கு உணவு ஊட்டுவது மருந்து கொடுப்பது என அனைத்து உதவிகளையும் செய்து வருகிறான்.

பிறகு டாக்டர் முல்லைக்கு தற்பொழுது ட்ரீட்மெண்ட் செய்து இருப்பதால் வயிற்றுவலி வரும் எனவே இதற்கு மேல் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் இன்னும் ஒரு வாரத்தில் இந்த சிகிச்சைக்கான பலன் தெரிந்துவிடும் என்று கூறியுள்ளார். இவ்வாறு இன்னும் சில நாட்களில் கதிர் மற்றும் முல்லையின் ரொமான்ஸ மீண்டும் ஆரம்பிக்கும். பிறகு ரசிகர்கள் சொந்த பொண்டாட்டிய கூட இப்படி பணிவிடை செஞ்சிருக்க மாட்டீங்க என்று கூறிவருகிறார்கள்.

Leave a Comment