பெத்த புள்ளனு கூட பாக்காம இப்படி முறைக்கிறியே ராதிகா.. கமலா இந்த அசிங்கம் உனக்கு தேவையா…

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரியின் கேஸ் கோர்ட்டுக்கு வருகிறது அப்பொழுது இன்று தீர்ப்பு வழங்கப்போவதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் ஆரம்பத்தில் ராமமூர்த்தி உள்ளே நான் வரவில்லை ஆவல் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியாது எனக் கூறுகிறார் பிறகு பாக்யா பேச்சைக் கேட்டுக் கொண்டு இதெல்லாம் பாக்கணும் என்று எனக்கு தலையெழுத்து வருகிறேன் என கூறிவிட்டு உள்ளே போகிறார்.

உள்ளே இரு தரப்பு வாதத்தையும் விசாரித்த நீதிபதி ஈஸ்வரிக்கு தண்டனை வழங்குவதை அறிவித்துள்ளார் சிறிது இடைவெளிக்கு பிறகு வழங்குவேன் என கூறியுள்ளார். இதனால் ராமமூர்த்தி, ஈஸ்வரி, செழியன், எழில் என அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஆனால் பாக்யா கோர்ட்டுக்கு வராததால் அனைவரும் பாக்கியா எங்கே என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பாக்கியா மயூவை சந்திக்க சென்றுள்ளார் மயூவை அழைத்து வந்து சாட்சி சொல்ல முயற்சி செய்கிறார். பாக்யா கோர்ட்டுக்கு வரும் பொழுது ராமமூர்த்தி வெளியே நின்று அழுது கொண்டிருக்கிறார். அவரை பார்த்து பாக்கியா ராமமூர்த்தியிடம் மாமா என்னாச்சு என கேட்க தீர்ப்பு சொல்லிட்டாங்க என கதறுகிறார். ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் அதனை அறிவித்து விடுவார்கள் எனவும் கூற பாக்யா நம்பிக்கையாக  இருங்க மாமா கண்டிப்பா அத்தையை  இன்னைக்கு நம்ம வெளியில எடுத்திடலாம் என கூறுகிறார் அது எப்படி பாக்யா என கேள்வி எழுப்புகிறார்கள் அனைவரும்.

உடனே பாக்கியா உள்ளே சென்று தன்னுடைய வக்கீலிடம் ஏதோ கூற ராதிகா அதிர்ச்சி அடைகிறார் அதுமட்டுமில்லாமல் வக்கீல் நீதிபதியிடம் ஒரு பேப்பரை கொடுத்து இந்த சாட்சியை விசாரிக்க வேண்டும் என கூறுகிறார் நீங்கள் விசாரிக்கலாம் என அனுமதி கொடுக்கிறார்கள் உடனே யார் அந்த சாட்சி என அனைவரும் அதிர்ச்சியாக மயூரா மயூரா மயூரா என கத்துகிறார் அப்பொழுது பாக்யா மயூராவை அழைத்து வருகிறார்.

ராதிகா மற்றும் கமலா இருவரும் அதிர்ச்சி அடைந்து கத்துகிறார்கள் சாட்சி சொல்லக்கூடாது எனவும் பார்வையால் மிரட்டுகிறார்கள். ஆனால் மயூரா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூண்டில் ஏறி ஈஸ்வரி பாட்டி அம்மாவை தள்ளி விடவில்லை என கூறுகிறார் அம்மா ஃப்ளவர் வாஸ் தடிக்கு தான் விழுந்தார் எனவும் கூறுகிறார் இதனால்  கமலா மற்றும் ராதிகாவை திட்டுகிறார் நீதிபதி இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.