ராதிகாவிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்ட கோபி.! அப்புறம் என்ன மந்திரிச்சு தான் விடனும்…

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சீரியலை ஒற்றை ஆளாக தாங்கி நிற்கிறார் கோபி.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் இனியா ஸ்கூலில் டாப் 5 மாணவர்களில் ஒருவராக வந்துள்ளார். அதனை வீட்டில் கூறிவிட்டார் ஆனால் கோபியிடம் கூறாமல் விட்டுவிட்டார் கோபி தானே முன்வந்து இனியாவிடம் கேட்க பிறகுதான் இனியா கூறுகிறார் ஆனாலும் மனம் கேட்காமல் இனிய டாப் 5 இடத்தில் வந்துள்ளது நினைத்து பெருமைப்படுகிறார்.

அதுமட்டுமில்லாமல் ஸ்கூலுக்கு சென்று அவர் மெடல் வாங்குவதையும் பார்க்க ஆவலுடன் செல்கிறார் ஆனால் கோபி ஸ்கூலுக்கு வரும் நேரத்தில் ராதிகா போன் செய்து மயூவை ஸ்கூலில் விட்டுவிட்டு போகலாம் எனக் கூற கோபி பொய் சொல்லிவிட்டு ஸ்கூலுக்கு தான் வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் இனியா மெடல் வாங்குகிறார் அதன்பிறகு மைக்கை பிடித்து பேசும் இனியா இந்த லெவலுக்கு நான் வந்ததற்கு காரணம் என்னுடைய அம்மா தான் என கூறுகிறார் அப்பொழுது கோபி என்னுடைய மகள் தான் என தன்னைத்தானே கூறி பெருமைப்படுத்தி கொள்கிறார்.

பங்க்ஷன் முடிந்தவுடன் கோபி கிளம்புகிறார் அப்பொழுது ராதிகா கோபியை பார்த்து விடுகிறார் என்ன கோபி இதெல்லாம் வேலை இருக்குன்னு சொன்னீங்க ஆனா இப்படி பொய் பொய்யா சொல்லிட்டு இங்க வந்து இருக்கீங்க இப்படி பொய் சொல்ற உங்களோட நான் எப்படி வாழ்றது என கத்துகிறார் ஆனால் கோபி ராதிகாவை கையை பிடித்து காரில் உட்காரு நான் சொல்கிறேன் என கூட்டிக்கொண்டு செல்கிறார்.

அப்பொழுது ராதிகா உங்க மேல பாசமே இல்லாத உங்க பொண்ணு பங்ஷனுக்கு வந்து இருக்கீங்க ஆனா மயூவ ஸ்கூலில் விடலாம் என  சொன்னதுக்கு நீங்க வரல என கேள்வி எழுப்புகிறார் இத்துடன் இன்றைய ப்ரோமோ வீடியோ முடிகிறது.