பாக்கியா வீட்டிற்கு வந்து வீடியோவை காட்டிய மாலினி.! வீட்டை விட்டு வெளியேறிய ஜெனி..! பரபரப்பாகும் பாக்கியலட்சுமி.

baakiyalakshmi today promo : பாக்கியலட்சுமி சமீபத்திய எபிசோடில் பாக்யா தன்னுடைய இரு மகன்களின் நிலைமை பார்த்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் மாலினி அவர்களிடம் நேரடியாக சென்று செழியனுக்கும் உனக்கும் என்ன இருக்கு என்று எனக்கு தெரியாது ஆனால் ஏதோ தவறாக தெரிகிறது தயவுசெஞ்சு செழியனை விட்டுப் போயிடு என கெஞ்சுகிறார்.

அதற்கு மாலினி ஒரு பொண்ணோட வாழ்க்கையை வீணாக்குற அளவுக்கு நான் மோசமான ஆள் கிடையாது ஆனால் செழியன் என் வாழ்க்கையை வீணாக்கிட்டான் கண்டிப்பாக செழியனை  பழிக்கு பழி வாங்குவேன் என சபதம் போடுகிறார். இதனால் பாக்கிய அதிர்ச்சி அடைந்து உரைந்து நிற்கிறார். மற்றொரு பக்கம் எழில் வாழ்க்கை நினைத்து கவலைப்படுகிறார்.

அஜித்தை பற்றி குறையாக சொன்ன பிரபல இயக்குனர்.! அவர் மனைவியுடன் நடித்த அத்தனை படமும் ஹிட்.. ஆனாலும் இப்படி ஒரு பேச்சா..

எழில் திருமணம் செய்து கொண்ட அமிர்தாவின் கணவர் கணேஷ் மீண்டும் வந்துவிட்டார். அவர் வீட்டிற்கு வர ஆரம்பித்துவிட்டார் எப்படியாவது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென நினைத்துக் கொண்டிருக்கிறார். இதனை கோபியிடம் சொல்லி ஏதாவது ஒரு சொல்யூஷன் கண்டுபிடிக்கலாம் என நினைத்து கோபியிடம் பேசும் பொழுது ராதிகா பாக்யாவை அசிங்கப்படுத்தி விடுகிறார்.

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் மாலினி பாக்யா வீட்டிற்கு வந்து செழியன் என் வாழ்க்கையை வீணாக்கி விட்டான் எங்க ரெண்டு பேருக்கும் வேற ஒரு ரிலேஷன்ஷிப் இருக்கிறது. இது எல்லாமே பாக்யாவிற்கு தெரியும் என மாலினி கூறியவுடன் ஜெனி அதிர்ச்சி அடைகிறார் அதுமட்டுமில்லாமல் ஈஸ்வரி வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள்.

ரியலாக இருக்க வேண்டும் என இயக்குனர் செய்த வேலை.! காஞ்ச மாடு கம்பள பூந்தது போல் நம்பர் நடிகை பதம் பார்த்த விரல் நடிகர்..

உடனே ஜெனி பாகிய பேசும் பொழுது போதும் நிறுத்துங்கள் ஆண்ட்டி உங்க விளக்கம் தேவையில்லை உங்க பையனுக்கு நீங்க சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருங்க என கூறிவிட்டு வீட்டை விட்டு ஜெனி வெளியே போகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.