கட்டம் போட்டு காய் நகர்த்திய கோபி.. மாமியார் என்று கூட பார்க்காமல் பாக்யா கொடுத்த பதிலடி.. பாக்கியலட்சுமி தரமான சம்பவம்

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி இடம் ஈஸ்வரி கொஞ்சம் உங்க கிட்ட பேசணும் எனக் கூறுகிறார் அதே போல் நானும் உன்னிடம் சில விஷயங்கள் கேட்கணும் எனவும் ராமமூர்த்தி கூறுகிறார் அதன் பிறகு ஈஸ்வரிடம் உன் பிள்ளை இவ்வளவு பெரிய கேடுகெட்ட வேலையை பண்ணி இருக்கானே அதை பத்தி தெரிஞ்சுகிட்டே என்கிட்ட இருந்து மறச்சிட்டியே என ராமமூர்த்தி கோபப்படுகிறார்.

உடனே ஈஸ்வரி மத்தவங்க தான் அவங்க மேல கோவப்படுறாங்கன்னா அவன் நம்ம பெத்த பிள்ளைங்க நாமளும் கோபப்பட முடியுமா என பதிலுக்கு பேசுகிறார் உடனே ராமமூர்த்தி இப்படி எல்லாம் பேசிட்டு இருந்தா அவன் கூட நீயும் போயிடுனு ஒரே வார்த்தையில் சொல்லிடுவேன் என பேசுகிறார் நீங்க என்ன சொல்றது நானே போக தான் போறேன் என பதிலுக்கு ஈஸ்வரி சொல்லுகிறார் அதுமட்டுமில்லாமல் தாராளமா கிளம்பி போ நீ அங்க போய் அனுபவிச்சா தான் இந்த வீட்டோட அரும உனக்கு தெரியும் எனவும் ராமமூர்த்தி கூறிவிடுகிறார்.

எப்படா என்ன அனுப்பலாம்னு எல்லாம் எதிர்பார்த்தீர்களா என ஈஸ்வரி கேட்க நீ ஒரு முடிவை எடுத்துட்டு மத்தவங்கள குறை சொல்லாத என ராமமூர்த்தி பேசுகிறார் கோபி மற்றும் ராதிகா இருவரும் பெட்டி படுக்கையோடு கீழே வர நாங்க வீட்டை விட்டு கிளம்புறோம் நீங்க எல்லோரும் சந்தோஷமா இருங்க நல்லா இருங்க என வாழ்த்து சொல்லி தன்னுடைய அம்மாவை கோபி கூபிடுகிறார்  உடனே பாட்டி உள்ளே இருக்காங்க நாங்க சொல்லிக்கிறோம் நீங்க கிளம்புங்க என பேசுகிறார் செழியன்.

அதுமட்டுமில்லாம உங்க பிளான் எனக்கு புரிஞ்சு போச்சு பாட்டி அப்படியே ஓடி வந்து என் புள்ள என் கூட தான் இருப்பான்னு சொல்லுவாங்க அதான் உங்க பிளானா என பேசுகிறார் டேய் ஹீரோ கொஞ்சம் அமைதியா இரு என்று கோபி சொல்லுகிறார் பிறகு ஈஸ்வரி பெட்டி படுக்கையோடு வெளியே வரதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இது என்ன பாட்டி நீங்க ஏன் பெட்டி படிக்கையை எடுத்துட்டு  வரீங்க என கேட்க நான் அவங்க கூட போறேன் எனவும் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் கோபி என்கூட தான் அம்மா இனிமேல் இருப்பாங்க எனவும் கூறுகிறார் செழியன் எழில் என அனைவரும் ஈஸ்வரியை கேள்வி கேட்க அவர் அமைதியாக இருக்கிறார்.

உடனே கோபி என் அம்மா யார் கூட இருக்கணும்னு நான் தான் முடிவு பண்ணனும் என கோபி கூறுகிறார் என் கூட வந்து இரும்மான்னு ஒரே ஒரு வார்த்தை தான் கேட்டேன் என் மேல உள்ள பாசத்துல அவங்களும் வரேன்னு சொல்லிட்டாங்க என ஒரே வார்த்தையில் முடிக்கிறார் இதனால் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள் கோபி ஈஸ்வரி ராதிகா மூவரும் வீட்டை விட்டு வெளியே போகும் பொழுது பாக்கிய எதிரே வர இனியா பாட்டியும் அப்பா கூட போறாங்க என கூறுகிறார் உடனே பாக்கியா அதிர்ச்சி அடைகிறார் அதுமட்டுமில்லாமல் பாக்கியா விடம் கோபி அத்தை என்னை விட்டு போகாதன்னு நீ கெஞ்சி அலனும் அதையும் மீறி அம்மா என் கூட வரணும் அப்பதான் அத பார்க்க எனக்கு சந்தோஷமா இருக்கும் என பேசுகிறார் ஆனால் பாக்கியா எதுவுமே வாய் பேசாமல் வழி விட்டு நிற்க ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்து கோபி பல்பு வாங்குகிறார்.

என் புள்ளைய விட்டுட்டு என்னால இருக்க முடியாது பாக்கியா என்று சொல்ல பாக்கியா உடனே நான் எதுவும் சொல்லலையே அத்தை என்று பதிலடி கொடுக்கிறார்  அப்பொழுது என்னை எப்படா வெளியே அனுப்பலாம்னு நீயும் காத்துகிட்டு இருந்தியா என கேள்வி கேட்க ராமமூர்த்தி நீ ஒரு முடிவு எடுத்துட்ட பாக்யாவை திட்டி போகலாம்னு பாக்குறியா என்று பேசுகிறார் மறுபக்கம் முதலில் வீட்டுக்குள் ராதிகா வர  அதை பார்த்து ராதிகா அம்மா என்ன தனியா வந்து இருக்க மாப்பிள்ளை வரலையா என்று கேட்கிறார்.

பிறகு கோபியம் கோபியின் அம்மா ஈஸ்வரியும் பெட்டி படிக்கையுடன் கையோடு உள்ளே வருகிறார்கள் கோபி வருவதை பார்த்து மயூ சந்தோஷப்படுகிறார் கையில் இரண்டு பேக் வைத்திருப்பதை பார்த்து கமலா குழப்பம் அடைய ஒன் மீட் என சொல்லிவிட்டு ஈஸ்வரியை கூட்டி வர கமலா அதிர்ச்சி அடைகிறார் கமலா ஈஸ்வரி ஒருவரை ஒருவர்  பார்த்து முறைத்துக் கொள்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.