சபாஷ் சரியான போட்டி மாமியாருடன் மல்லு கட்டும் மருமகள்.! ஈஸ்வரியால் பாக்கியா எடுத்த அதிரடி முடிவு..

baakiyalakshmi today episode october 21 : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் நிலா பாப்பா புகைப்படத்தை பார்த்து உன்னை சீக்கிரம் என் கூட கூட்டிட்டு வந்துருவேன் இப்ப போட்டோல மட்டும்தான் என் கூட இருக்கிற  அதுக்கப்புறம் நேரிலேயே என் கூட தான் இருப்ப எனக் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் கணேஷின்  அப்பா அம்மா வருகிறார் அப்பொழுது கணேஷிடம் இங்கே என் ரூம் எடுத்து தங்கி இருக்க நம்ப வா வீட்டுக்கு போகலாம் என பேச அதற்கு கணேஷ் கோபப்பட்டு ஒழுங்கா இங்க இருந்து போயிடுங்க என்பது போல் பேசுகிறார்.

நான் அமிர்தா நிலா இல்லாம இங்கிருந்து வர மாட்டேன் ரெண்டு பேரையும் கூட்டிகிட்டு தான் வருவேன் என கூற அதற்கு கணேசன் அப்பா அம்மா கொஞ்சமாவது புரிஞ்சுக்கோடா என பேசுகிறார்கள். பிறகு நீ தான் அங்க வர மாட்ட நாங்களாவது உன் கூட இருக்கும் என பேச ஓகே சொல்லுகிறார். அடுத்த காட்சியில் ஈஸ்வரி நான் கோபியை வீட்டுக்கு கூட்டிட்டு வர போறேன் எனக் கூறுகிறார் அதற்கு பாக்யா அப்படி ஒரு நிலைமை நடந்துச்சுன்னா நான் இந்த வீட்டை விட்டு கிளம்பிடுவேன் என பேசுகிறார்.

Leo Box office: லியோ 2 – வது நாள் வசூல் விவரம்.! வாழ்க்கை ஒரு வட்டம்டா.. ஜெயிக்கிறவன் தோப்பான்.. தோக்குறவன் ஜெயிப்பான்.!

ஆனாலும் ஈஸ்வரி செழியன் லேட், நைட்டா வந்தா நீ தட்டி கேக்குற இல்ல அவனுக்கு சப்போர்ட் பண்ணி தானே நிக்கிற, எழில் இவ்வளவு தப்பு பண்ணுனா அப்பவும் அவனுக்கு சப்போட்டா தான பேசுற என கேட்க உடனே ராமமூர்த்தி அவங்க எல்லாருமே அவங்களுக்கு புடிச்ச பொண்ணுங்களோட வாழ்வதற்காக பிடிவாதமா இருந்தாங்க உன் மகன் அப்படியா கட்டின பொண்டாட்டிக்கு துரோகம் செஞ்சுட்டுல்ல போயிருக்கான் என பேசுகிறார்.

ஆனாலும் ஈஸ்வரி யார் என்ன வேணாலும் நினைச்சீங்க கண்டிப்பா நான் கோபியை கூட்டிட்டு தான் வரப் போறேன் என கிளம்புகிறார் அதற்கு பாக்கியா  அப்படி ஒரு நிலைமை நடந்துச்சுன்னா என்னோட முடிவை யாராலும் மாற்ற முடியாது யார் பேச்சையும் நான் கேட்க மாட்டேன் என பாக்கியா கூறிவிடுகிறார். ஈஸ்வரி கோபியை  அழைக்க ராதிகா  வீட்டிற்கு போகிறார் அந்த சமயத்தில் ராதிகா கோபியிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் இனிமே நான் வேலைக்கு போல உங்க அம்மா சொல்ற மாதிரியே வீட்டிலேயே இருக்கேன்.

முதன் முதலாக லியோ வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்த நிறுவனம்.! கொளுத்துங்கடா வெடிய

ஆனா இனிமே நீங்கதான் கரண்ட் பில் ஹவுசிங் லோன் வீட்டு செலவு எல்லாத்தையும் பார்த்துக்கணும் என பேசுகிறார் அதற்கு கோபி என்னது நான் ஹவுஸிங் லோன் கட்டனுமா என பொங்கி எழுகிறார் இதனால் இருவருக்கும் சண்டை வாக்குவாதமாக மாறிக்கொண்டிருக்கிறது அந்த சமயத்தில் ஈஸ்வரி இனியும் என் மகனை தனியாக விட்டால் நீ கொன்னுடுவ நீ வா கோபி நம்ம வீட்டுக்கு போகலாம் என அழைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் கோபி எப்படி அம்மா அது சரிப்பட்டு வராது இங்க இருந்து நா அங்க வரவே முடியாது அது நல்லா இருக்காது என பேசுகிறார் அந்த சமயத்தில் கோபியிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை, திடீர் என கோபி ஈஸ்வரியிடம் கிளம்பி வருகிறார் ஆனால் அங்கு ராமமூர்த்தி, இவ கூப்பிட்ட உடனே அவன் வந்துருவானா ராதிகா தான் விட்டுருவாளா என பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஈஸ்வரி வருகிறார் அப்பொழுது என்ன ஈஸ்வரி வந்துட்டானா வரலன்னு சொல்லிட்டானா என பேச உடனே உள்ளே வா கோபி என கூப்பிடுகிறார் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி  எபிசோட் முடிகிறது.

Exit mobile version