மாமியாரை அடிக்க கை ஓங்கிய கோபி… ஈஸ்வரியை ஜெயிலில் வைக்க ராதிகா அம்மா செய்த கேவலமான செயல்..

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி தன்னுடைய நண்பனிடம் வீட்டில் உள்ள பிரச்சனையை சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் வீட்டில் இருந்து வந்தால் பிசினஸிலும் பிரச்சனை எனக் கூற வீட்டு பிரச்சனையை பிஸ்னசில் கொண்டு வராதே ஏற்கனவே ஒரு டைம் லாஸ் ஆயிடுச்சு மறுபடியும் லாஸான அவ்வளவுதான் என அறிவுரை கூறுகிறார்.

மற்றொரு பக்கம் ராதிகாவின் அம்மா கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார் ராதிகா வந்து ஆறுதலாக பேசுகிறார் அப்பொழுது அவருக்கு என் மேல கொஞ்சம் கூட அன்பே கிடையாது, அவங்க அம்மா தான் எல்லாமே. சரி ஒரு குழந்தை உருவாச்சுனா நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பீங்கன்னு நான் நினைச்சேன் ஆனா அதுக்கு வழி இல்லாம போச்சு என ராதிகாவின் அம்மா புலம்புகிறார்.

உடனே ராதிகா குழந்தை இல்லை என்றல் கொஞ்சமாவது பீல் பண்ணுவார்கள் என்று நினைத்தேன் ஆனால் அதுக்கும் வழி இல்லாம போச்சு என ராதிகா கூறுகிறார் இப்படி மாறி மாறி பேசிக்கொண்டு இருக்கிறார்கள் ராதிகாவின் அம்மாவும் உன் வாழ்க்கையை நானே வீணாக்கிட்டேன் நானே ஒரு வழியா சரி பண்ணுகிறேன் என சபதம் கொடுக்கிறார்.

மற்றொரு பக்கம் பாக்யா வீட்டில் பாலை வைத்துவிட்டு ஜெனி குழந்தை கத்துகிறது என மேலே சென்றுள்ள பொழுது பால் பொங்கி ஊத்தி காஸ் லீக் ஆகிவிட்டது அந்த வாசத்தை உணர்ந்த அமிர்தா ஸ்டவ்வை ஆஃப் செய்துவிட்டு ஜன்னலை திறந்து விடுகிறார் உடனே செல்வி வந்ததும் யார் கேஸை திறந்து விட்டது என கேட்க நான் இப்பதான் வந்தேன் என கூறுகிறார் பாலை அடுப்பில் வைத்து விட்டு எங்கே போனீர்கள் எனவும் கேட்கிறார்.

நான் பாலை வைக்கவில்லை என செல்வி கூற உடனே ஜெனி நான் தான் பாலை வைத்துவிட்டு மேலே பாப்பா கற்றுவதாக சென்றேன் என கூறுகிறார். நீங்க ஆப் பண்ணிட்டு போயிருக்கலாமே என இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கிறார்கள் எனக்கு எதுவுமே தெரியாது உங்களுக்கு தான் தெரியுமா என ஜெனி அமிர்தாவை பார்த்து கேட்கிறார் நான் உங்க கிட்ட சண்டை போடறதுக்கு வரல என கூறுகிறார்.

ஒரு வழியாக அனைவரையும் சமாதானம் ஆகிறார்கள் மற்றொரு பக்கம் ஈஸ்வரி பாக்யா ராமமூர்த்தி என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது கடந்த காலத்தை பற்றி பேச அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் கோபி வீட்டிற்கு வந்து காலிங் பெல் அடிக்கிறார் அப்பொழுது ராதிகாவின் அம்மா கதவை திறக்கிறார். கோபி ராதிகா எங்கே என கேட்க அதற்கு அவ மனசு நிம்மதிக்காக வெளியே போயிருக்கா என பேசுகிறார்.

ஆனாலும் கோபி அவளுக்கு தான் உடம்பு சரியில்லையே எதுக்கு வெளியில விட்டீங்க என கேட்க அவ இங்கே இருந்து சாகனுமா என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் பச்சை கலர் பைலை காணவில்லை என கூறுகிறார் எனக்கு தெரியாது என ராதிகாவின் அம்மா கூறுகிறார். ஒரு குடிகார புருஷன் ஒரு கொலைகார அம்மா இவங்களுக்கு மத்தியில என் மகள் எப்படி குடும்பம் நடத்துவார் என பேச கோபி ராதிகாவின் அம்மாவை அறைய கை ஓங்குகிறார்.

அதேபோல் நாளைய எபிசோடில் ராதிகாவின் அம்மா ஈஸ்வரி மீது கொலை பழியை சுமத்தி கேஸ் கொடுத்து அரெஸ்ட் செய்ய கூறுகிறார்கள் போலீசும் பாக்யா வீட்டிற்கு அரெஸ்ட் செய்ய செல்கிறார்கள் இத்துடன் எபிசோட் முடிகிறது.