பேப்பரை கசக்கி தூக்கி எறிவது போல் பாக்கியாவை தூக்கி எறிந்த ஈஸ்வரி.! மீண்டும் வீட்டிற்கு வந்த கோபி.! பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி.

baakiyalakshmi serial today promo : பாக்கியலட்சுமி சமீபத்திய எபிசோடில் ராதிகா நகை வாங்க கோபியை அழைத்து சென்றதால் விலையை கேட்டு கோபி நெஞ்சை பிடித்துக் கொண்டு நாடகம் ஆடுகிறார் அது மட்டும் இல்லாமல் உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார்கள் அங்கு கோபிக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என டாக்டர் கூறிவிடுகிறார்.

ஆனாலும் ஸ்ட்ரெஸ் அதிகமானால் இது போல் வர வாய்ப்பு அதிகம் அதனால் கொஞ்சம் ஜாக்கிரையாக பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி விடுகிறார்கள் உடனே கோபி வீட்டிற்கு வந்துவிடுகிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கோபியின் அம்மா ஈஸ்வரி பதற்றமாகி செழியன் இனியா ஆகியோரை அழித்துக் கொண்டு ஈஸ்வரி கோபி இருக்கும் ராதிகா வீட்டிற்கு வருகிறார்.

அங்கு ஏதோ விசாரித்து பார்த்துவிட்டு இங்கு வந்ததால் தான் உனக்கு இது மாதிரி நடந்தது இவ இருக்கிற இடத்தில நீ இருந்தால் உனக்கு இந்த பிரச்சனை வரும் நீ நம்ம வீட்டுக்கு வந்து விடு என கூப்பிடுகிறார். அது மட்டும் இல்லாமல் செழியன் வாங்க பாட்டி வீட்டுக்கு போய் ஏதாவது பேசிக்கலாம் என அழைத்து வருகிறார் பிறகு வீட்டில் உள்ளவர்களிடம் ஈஸ்வரி பேசி நான் கோபியை வீட்டுக்கு அழைத்து வரப் போகிறேன் என கூறுகிறார்.

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் இவ கூப்பிட்ட உடனே அவன் ஓடி வரப்போறான் கைய புடிச்சுகிட்டு என ராமமூர்த்தி பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஈஸ்வரி வருகிறார் அப்பொழுது எங்க உன் மகன் கோபி வரலையா என கேட்க வா கோபி என அழைத்துச் செல்கிறார் ஈஸ்வரி இதனை பார்த்த பாக்யா அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் இனியாவிடம் உங்க அப்பாவை அழைத்துக் கொண்டு ரூமுக்கு செல் என கூறுகிறார்.

உடனே எழில் இவரை எதுக்கு இங்க அழைத்துக் கொண்டு வந்தீர்கள் என கத்துகிறார். அதேபோல் இவ்வளவு நாளாக கஷ்டப்பட்ட பாக்கியவை பேப்பரை கசக்கி எறிவது போல் ஈஸ்வரி தூக்கி எறிந்து விட்டு கோபியை அழைத்து வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.