பாக்கியவிடம் போட்டி போட்டு மூக்கை உடைத்துக் கொண்ட கோபி.. மீண்டும் பாக்கியாவிடமே ஐடியா கேட்கும் கோபி..

பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்திய எபிசோடில் ஈஸ்வரி ராதிகா மற்றும் ராதிகாவின் அம்மாவை படுத்தி எடுக்கலாம்  என நினைத்துக் கொண்டிருந்தார் ஆனால் அவர்கள் இருவரும் இணைந்து ஈஸ்வரியை தாக்க செய்ய ஆரம்பித்து விட்டார்கள் வேறு வழியே இல்லாமல் கோபி தலை உருண்டு கொண்டிருக்கிறது இரண்டு பக்கமும் கோபி மொத்து வாங்கி கொண்டு இருக்கிறார்.

இதன் நிலையில் கோபி தன்னுடைய அம்மா ஈஸ்வரியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்து பார்த்துக் கொள்கிறார் ஆனால் ராதிகா அவங்களால் இங்கு இருக்க முடியாது சண்டை போடாமல் இருக்கவே வாய்ப்பு இல்லை அதனால் அவங்க வீட்டிற்கு அனுப்பி விடலாம் எனக் கூற அதற்கு முடியவே முடியாது என கோபி மறுத்து விடுகிறார்.

கோபி வீட்டு வேலை ஆபீஸ் ஹோட்டல் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் ஈஸ்வரியை அழைத்துக் கொண்டு வாக்கிங் சென்றுள்ளார் கோபி அப்பொழுது பாக்கியா பைக்கில் வருகிறார் பைக்கில் வரும் பாக்கியவை நிறுத்தி ஹோட்டலுக்கு கிளம்பி விட்டாயா என கேட்கிறார் ஈஸ்வரி அதற்கு ஆமாம் அத்தை என கூறிவிட்டு செல்கிறார்.

உடனே கோபி இப்பவே ஹோட்டலுக்கு கிளம்பிட்டா அப்புறம் யாரு வீட்ட பார்த்துப்பா என கோபி கேட்க அவ எல்லா வேலையும் முடிச்சிட்டு தான் போறா என ஈஸ்வரி கூறுகிறார் உடனே கோபி மனதிற்குள் நானும் இனிமே ஆரம்பிக்கிறேன் என சொல்லிவிட்டு அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்பாக பார்க்க பார்க்கிறார் அப்பொழுது அவ்வை சண்முகி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வேலை வேலை ஆம்பளைக்கும் வேலை பொம்பளைக்கும் வேலை என்ற பாடல் ஒலிக்கிறது.

ஈஸ்வரிக்கு காபி போட்டு கொடுப்பது சாப்பாடு எடுத்து வைப்பது ஹோட்டல் வேலைகளை கவனிப்பது என கோபி பரபரப்பாக இருக்கிறார் பாக்கியா செல்லும்பொழுது கோபியை  அழைத்து எப்படி பாக்கிய உன்னால வீட்டு வேலையவும் ஹோட்டல் வேலையும் பார்க்க முடிகிறது என கேட்கிறார் அதற்கு பாக்கியா  நீங்க தான் பெரிய ஆளாச்சே உங்களால எதுவும் முடியலையா அதெல்லாம் ஒன்னும் சொல்ல முடியாது உங்க வேலைய பாருங்க என கூறி விடுகிறார்.

Exit mobile version