சவால் விட்டே திவாலாகும் பாக்யா.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு, பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

சீரியல் ஹீரோயின் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என இயக்குனர்கள் ஒரு பார்முலாவை வைத்திருக்கின்றனர். எப்போதும் அழுது கொண்டே இருக்க வேண்டும், போராட வேண்டும், சந்தோஷம் என்பது அவர்கள் வாழ்க்கையில் இருக்கவே கூடாது.

இதுதான் எல்லா சீரியல்களிலும் நடக்கிறது. அப்படித்தான் பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஈஸ்வரி ரெஸ்டாரண்டை பூட்டி சீல் வைத்து விடுகின்றனர்.

அதை எப்படியாவது திறக்க வேண்டும் என பாக்யா பாடுபட்டு வருகிறார். அது பற்றிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதாவது சவால் விடுவதெல்லாம் இந்த பாக்யாவுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

திரும்பவும் என்னுடைய ஹோட்டலை திறப்பேன். யார் என்னை குறை சொன்னார்களோ அவர்களே பாராட்டுவார்கள் என வழக்கம் போல பாக்யா சவால் விடுகிறார். ஆனால் பார்க்கும் நமக்கு நீ ஆணியே புடுங்க வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது.

எத்தனை நாளைக்கு இதே கதையை உருட்டி கொண்டிருப்பீர்கள். சவால் விட்டு பாக்கியா திவால் ஆகி போகிறார் என பார்வையாளர்கள் கடுப்பாகி வருகின்றனர். ஆனால் இயக்குனர் இன்னும் சில வருடங்கள் சீரியலை இழுக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார் போல.

ஏற்கனவே தாத்தா இறந்தபோது சீரியல் முடிந்துவிடும் என எல்லோரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்தோம். ஆனால் போகிற போக்கை பார்த்தால் பாக்கியலட்சுமி இன்னும் ஐந்து வருடங்கள் ஒளிபரப்பானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.