பாக்கியலட்சுமி சீரியலில் தலைகீழ நின்னு தண்ணி குடித்தாலும் இனி இது இருக்காது..! உண்மையை உடைத்த கோபி..

பாக்கியலட்சுமி சீரியல் சமீப காலமாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது ஈஸ்வரியை ஜெயிலில் வைக்க பாக்கிய போராடி அவரை வெளியே கொண்டு வருகிறார். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது மயூ தான் ராதிகாவின் மகள் கோர்ட்டில் வந்து சாட்சி சொன்னதால்தான் ஈஸ்வரி வெளியே வந்தார்.

ஆனால் மையுவை சின்ன பொண்ணு என்று கூட பார்க்காமல் ராதிகா மற்றும் கமலா இருவரும் திட்டுகிறார்கள். மற்றொரு பக்கம் கோபி தனது நண்பனிடம் அழுது புலம்பி கொண்டிருக்க பிறகு பாக்யா வீட்டிற்கு செல்கிறார் அப்பொழுது ஈஸ்வரி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது சாப்பாட்டை வைத்து விட்டு நீ எனக்கு மகனே கிடையாது என தலையில் தண்ணீர் ஊற்றி தலைமுழுகிறார்.

கோபி பெற்ற தாய் இப்படி ஒரு தவறை செய்திருப்பார் என நம்பியது தான் ஈஸ்வரிக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் எனக்கு ஒரே ஒரு மகள் தான் அது பாக்கியா மட்டும் தான் என ஈஸ்வரி தன்னுடைய வாயால் சொன்னது அனைவருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் இன்றைய எபிசோடில் ராதிகா பாக்யாவிடம் உனக்கு ஒரு மகள் இருக்கிறார் அவளை அழைத்துக்கொண்டு இதுபோல் கோர்ட்டுக்கு சென்றால் உனக்கு எப்படி இருக்கும் என கேள்வி எழுப்புகிறார்.

உடனே பாக்யா செஞ்சது தப்புதான் ஆனா எனக்கு வேற வழி கிடையாது என ராதிகாவிடம் கூற ராதிகா இன்னும் கோபமாக எனக்கும் ஒரு காலம் வரும் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். அதே போல் கோபி மீண்டும் ஈஸ்வரியை பார்க்க செல்ல ராமமூர்த்தி உள்ளே வந்தால் காலை வெட்டி விடுவேன் என மிரட்டுகிறார்.

இப்படி இருக்கும் நிலையில் கோபி ஒரு வீடியோ காணொளியை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் கோபி இனிமேல் பாக்கியலட்சுமி சீரியலில் என்ன நடக்கப் போகிறது என்பதை கூறியுள்ளார் அதாவது இனிமேல் பாக்கியலட்சுமி சீரியலில் காமெடி சீன் எதுவுமே கிடையாது. நீங்களே பார்த்து இருப்பீர்கள் கோர்ட் அது இது என குழப்பமாக போய்க் கொண்டிருக்கிறது அதனால் இனிமேல் சோகமான விஷயங்கள் எல்லாம் நடக்கும் இதற்கு இடையில் நான் போய் காமெடி பண்ணினால் அது நன்றாக இருக்காது 50 டு 100 எபிசோடுக்கு காமெடி இருக்கவே இருக்காது ஃபுல்லா அழும் காட்சிகள் மட்டுமே இருக்கும் என கூறியுள்ளார்.

ஒருவேளை வீடியோவை பார்த்தால் இயக்குனர் பீல் பண்ணி கோபிக்கு ஊத்தி கொடுப்போம் காமெடி பண்ண வைப்போம் என்று நினைத்தால் தான் உண்டு எனக் கூறியுள்ளார்.