ஏழிலை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன பாக்கியா..! ஈஸ்வரியை விரலை நீட்டி பேசும் பேரன்.. எல்லாத்துக்கும் காரணம் அமிர்தா தானா..

பாக்கியலட்சுமி சீரியலில் சமீப காலமாக சோகத்திற்கு பஞ்சமே கிடையாது காமெடி அனைத்தும் இறுந்த இந்த சீரியலில் தற்பொழுது சீரியஸாக சென்று கொண்டிருக்கிறது அழுகை காட்சிகள் தான் அதிகமாக இருந்து வருகிறது இந்த நிலையில் பாக்யலட்சுமி சீரியல் டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது அப்படி இருக்கும் வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி மீண்டும் பிறகனண்ட் ஆகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள்.

ஆனால் ஜெனி பிரகனண்ட் ஆனதால் அமிர்தாவை பார்த்து உனக்கு எப்பொழுது குழந்தை பிறக்கப் போகிறது என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் எழிலை பார்த்தும் இந்த கேள்வியை கேட்கிறார் ஆனால் அமிர்தா தனியாக இருக்கும் பொழுது அமிர்தாவை பார்த்து ஈஸ்வரி பல கேள்விகளை கேட்டுள்ளார். இதனால் அமிர்தா கண்கலங்கியபடி எழிலிடம் சென்று கூறுகிறார்.

உடனே எழில் ஈஸ்வரி பாட்டிஇடம் சென்று அமுதா கிட்ட குழந்தையை பத்தி என்ன கேட்டீங்க என கோபத்துடன் கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் இன்னொரு டைம் குழந்தையை பத்தி கேட்டா என்ன செய்வேன் தெரியுமா என மிரட்டுகிறார் உடனே ஈஸ்வரி அப்படித்தான் கேட்போம் உன்னால என்ன பண்ண முடியும் என ஈஸ்வரி பேசுகிறார்.

எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு இருந்தா இரு இல்லன்னா வீட்டை விட்டு போ வீட்டை விட்டு போனாதான் உனக்கு எப்படி சொகுசா வாழ்ந்துகிட்டு இருக்காங்கறது தெரியும் என திட்டுகிறார் இதனால் பாக்கியா கோபப்பட்டு எழில் இதுக்கு மேல நீ வீட்ல இருக்க கூடாது வீட்டை விட்டு போ என திட்டுகிறார்.

பாக்யா வீட்டை விட்டு போ என்று கூறியதும் எழில் மற்றும் அமிர்தா இருவரும் வீட்டை விட்டு வெளியே செல்கிறார்கள் ஆனால் செழியன் ஜெனி என அனைவரும் அழைத்தும் எதையும் கண்டுகொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே குழந்தையை தூக்கிக் கொண்டு கிளம்புகிறார்கள்.