ஈஸ்வரியை கைது செய்த சந்தோஷத்தில் கெத்து காட்டும் ராதிகாவின் அம்மா.. உண்மையை தெரிந்து கொண்ட கோபி.. எரிமலையாக வெடிப்பாரா..

பாக்கியலட்சுமி சீரியலில்  இன்றைய எபிசோடில் பாக்கியா ஜெனி, அமிர்தா, செல்வி என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது ஈஸ்வரி வந்து என்ன தனியா பேசிகிட்டு இருக்கீங்க வீட்ல என்ன நடந்தது எனக் கேட்கிறார் அதற்க்கு பாக்யா உடனே ரெஸ்டாரன்ட் பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் என சமாளிக்கிறார். மேலும் ஈஸ்வரி நீ இல்லாதப்ப வீட்ட நல்லா பாத்துக்கிட்டாங்களா உங்க மருமக என பாக்யாவுடன் கேட்க அதற்கு பாக்யா எல்லாரும் நல்லா பாத்துக்கிட்டாங்க என சொல்லி கூறுகிறார்.

மேலும் செல்வியை பார்த்து இவ ஏதாவது ஹெல்ப் பண்ணாலா இல்ல டிவி பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தால எனக் கேட்கிறார் உடனே செல்வி நான் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணினேன் என கூறுகிறார் இப்படி ஆளாளுக்கு ஈஸ்வரியை பார்த்து பரிதாபமாக பேசுகிறார்கள். அந்த சமயத்தில் மற்றொரு பக்கம் எப்பொழுது போலீஸ் வருவார்கள் என ராதிகாவும் ராதிகாவின் அம்மாவும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது கோபியை பார்த்து அதிர்ச்சி அடைந்து வேறு பேச்சியை மாற்றுகிறார்கள்.

அதேபோல் வண்டி வந்தவுடன் ஓடி போய் பார்க்க போலீஸ் வரவில்லை என்பதை ராதிகா விடம் கூறுகிறார் ராதிகாவின் அம்மா. பிறகு போலீஸ் வருகிறது செழியன் மற்றும் எழில் இருவரும் தடுத்து நிறுத்தி பார்க்கிறார்கள் எங்கள் வேலையை செய்ய விடுறீங்களா என கூறிக்கொண்டு ஈஸ்வரி பற்றி கேட்கிறார்கள். பாக்கியா குடும்பமே ஈஸ்வரி அதுபோல் தப்பு செய்யவில்லை எனக் கூறி சமாளிக்கிறார்கள்.

உடனே அனைவரும்  பேச ஆனால் போலீஸ் அவர்கள் சொல்வதை கேட்பது போல் தெரியவில்லை உடனே போலீஸ் எங்க வேலையை செய்ய விடுங்கள் என கத்துகிறார்கள் ஈஸ்வரியை கையை பிடித்து இழுத்து செல்கிறார்கள் பாக்யா குடும்பமே கதறி அழுகிறது ஆனாலும் போலீஸ் கண்டுகொள்ளாமல் அழைத்து செல்கிறார்கள் யாராவது தடுத்தீங்கன்னா உங்களையும் தூக்கி உள்ளே வைத்து விடுவேன் என மிரட்டுகிறார்கள்.

போலீஸ் அழைத்து செல்வதையும் பாக்கியா குடும்பம் கதறி அழுவதையும் பார்த்த ராதிகாவின் அம்மா சந்தோஷப்படுகிறார் அதேபோல் ராதிகா அவர்களைப் பார்த்து திகைத்து போய் நிற்கிறார் அந்த சமயத்தில்  கோபி என்ன செழியா போலீஸ்லாம் வந்திருக்கிறது என கேட்கிறார் உடனே கோபியை பார்த்து  ராமமூர்த்தி அரந்து அடிச்சு துன்புறுத்துகிறார் அதுமட்டுமில்லாமல் எல்லாத்தையும் செஞ்சுட்டு ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறியா என பேசுகிறார்.

இன்னும் நாங்க உங்களுக்கு என்ன பண்ணனும் செத்துவிடட்டுமா நாங்க ரெண்டு பேரும் என கோபியை  பார்த்து கேட்க கோபி திகைத்துப் போய் நிற்கிறார் அது மட்டும் இல்லாமல் என்ன நடந்தது என கேள்வி கேட்க அதற்கு பாக்கியா குடும்பத்திலிருந்து நடந்த விபரத்தை கூறுகிறார்கள் கோபி அதிர்ச்சடைகிறார் இனிமேல் ராதிகாவின் அம்மாவையும் ராதிகாவையும் கோபி பழிக்கு பழி வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version