வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டு பயத்தில் இருக்கும் ராதிகா.. கோபிக்கு தெரிய வரும் உண்மை… இடிந்து போய் இருக்கும் பாக்கியா குடும்பம்…

பாக்யலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வி, அமிர்தா மற்றும் ஜெனி இடம் அம்மா ஒரு தப்பும் செய்யல அவங்க யாருக்குமே கெடுதல் நினைச்சதே கிடையாது அவங்க மேல இப்படி ஒரு பழியை போட்டு இருக்காங்களே இது ஆண்டவனுக்கே அடுக்குமா வயிறு எரிஞ்சு சொல்றேன் அவுங்கெல்லாம் நல்லாவே இருக்க மாட்டாங்க என பேசுகிறார் அதே போல் அமிர்தா  செழியனும்,  எழிலும் வக்கீலை பார்க்க போயிருக்கிறார்கள் கண்டிப்பாக அம்மாவை வெளியே எடுத்து விடலாம் என பேசிக்கொள்கிறார்கள்.

உடனே செழியன் மற்றும் எழில் இருவரும் வருகிறார்கள் அப்பொழுது என்னாச்சு என கேட்க கைதாகட்டும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறி விட்டார்கள் என பேசுகிறார் இதனால் ஜெனி மற்றும் அமிர்தா அதிர்ச்சடைகிறார்கள் இந்த நேரத்தில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க ஈஸ்வரி மற்றும் பாக்கியா என அனைவரும் வீட்டிற்கு வருகிறார்கள்.

அப்பொழுது ஈஸ்வரி ஜெனி இடம் பாப்பா எங்கே அமிர்தாவிடம் பாப்பா எங்கே என கேட்கிறார் அனைவரும் தூங்குகிறார்கள் என கூறுகிறார்கள் ஆனால் ஈஸ்வரி சந்தோஷமாக இருப்பதை நினைத்து வருத்தப்படுகிறார்கள் ஏனென்றால் இன்னும் சற்று நேரத்தில் போலீஸ் கைது செய்து விடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் ஈஸ்வரி ராமமூர்த்திக்கு மட்டும் தெரியாது.

கிச்சனுக்கு சென்று பாக்கியா அழுது கொண்டிருக்கிறார் அப்பொழுது செல்வி மற்றும் அமிர்தா ஜெனி என அனைவரும் ஆறுதல் கூறுகிறார்கள். அந்த சமயத்தில் போலீஸ் செழியனுக்கு கால் செய்ய உங்க பாட்டி வந்துட்டாங்களா என கேட்கிறார் இப்பதான் வந்தார்கள் என கூற நீங்க வந்த உடனே எனக்கு இன்பார்ம் பண்ணி இருக்கணும் என்ன வேற எங்கேயாவது அனுப்பலாம்னு பிளான் பண்றீங்களா என கேட்கிறார்.

அதற்கு செழியன் இல்லை என்னிடம் நம்பர் கிடையாது என சமாளிக்கிறார் மற்றொரு பக்கம் ராதிகாவின் அம்மா ராதிகாவிடம் இன்னும் யாரும் கதற சத்தம் கேட்கலையே கதறிகிட்டு  தெருவில் ஓடுவாங்களே என பேசிக் கொண்டிருக்கிறார்கள் எனக்கு பயமாக இருக்கிறது என ராதிகா முழித்துக் கொண்டிருக்கிறார். என்ன நடக்கப் போகிறதோ என விழி பிதுங்கி நிற்கிறார் உடனே வெளியே வந்து ராதிகா மற்றும் ராதிகாவின் அம்மா பார்க்க அந்த சமயத்தில் கோபி வருகிறார் இருவரும் வெளியே வந்து நிற்பதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார் ஒருவேளை இவர்கள் இருவரும் தான் அந்த நாச வேலையை செய்யப் போகிறார்கள் என்பதை கோபி கண்டுபிடிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.