இனியா தலையில் விழுந்த அடுத்த இடி.. மீண்டும் ராதிகாவிடம் அசிங்கப்படும் கோபி..

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி பாக்யா வீட்டிற்கு சென்று இனியாவை சரியாக வளர்க்கவில்லை அவரை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை அதனால் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என பாக்கியா மீது பழி போட்டு பேசுகிறார் இதனால் அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் அது மட்டும் இல்லாமல் இனியா இனிமேல் இங்கு இருக்கிறது அவ்வளவா சரிப்பட்டு வராது நானே அழைத்துக் கொண்டு செல்கிறேன் என கூற உடனே கோபப்படுகிறார்கள் பாக்கியா வீட்டில்.

அதுமட்டுமில்லாமல் இப்பதான் உனக்கு இனியா ஞாபகம் வருகிறதா நீ திருமணம் செய்து கொண்டு போனியே அப்பலாம் இனியா  கதர்னாளே அதெல்லாம் உனக்கு ஞாபகம் இல்லையா இப்ப எந்த மூஞ்ச வச்சுக்கிட்டு இப்ப கூப்பிடுற. ஏற்கனவே ஒரு முறை இனியவை கூட்டிட்டு போயி அவ என்ன பாடுபட்டான்னு எங்களுக்கு தான் தெரியும் அவளை பாத்துக்க அவங்க அம்மா இருக்கா அண்ணி இருக்காங்க அண்ணன் இருக்காங்க தாத்தா பாட்டி நாங்க ரெண்டு பேரும் இருக்கோம் என  ஈஸ்வரி கூறுகிறார்.

இனியா பத்தி கவலைப்பட நீ யாரு என கேட்க கோபி அவளுடைய அப்பா எனக்கு கூறுகிறார் வீட்டை விட்டு வெளியே போ என ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி பாட்டி கூறுகிறார்கள் வீட்டுக்கு சென்ற கோபி ராதிகாவிடம் பேசுவதற்கு முயற்சி செய்ய உங்களுக்கு உங்களுடைய விஷயம் மட்டும் தான் பெருசா தெரியும் நான் குழந்தை இழந்துட்டு நின்னேனே உங்க கண்ணுக்கு நான் தெரியல. எனக்கு ஒரு கஷ்டம் தான் அதை கண்டுக்க கூட மாட்டீங்க ஆனா இப்ப உங்களுக்கு ஒரு கஷ்டம்னா நான் அத வந்து கேட்கணுமா ஆறுதலா பேசணுமா என வார்த்தையால் குத்தி கிழிக்கிறார்.

மேலும் ராதிகா இன்னும் கோபியை கேவலப்படுத்த மற்றொரு காட்சியில் இனிய காலேஜில் பப்புக்கு சென்ற அனைவரையும் ப்ரின்சிபேல் விசாரித்து  கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது அந்த ஸ்டூடென்ட்கள் வர அவர்களிடம் என்ன நடந்தது என கேட்கிறார்கள் பிறகு கேர்ள்ஸ் உள்ளே கூப்பிடுகிறார்கள் உங்கள வீட்டில் படிக்க வைக்க அனுப்புனா நீங்க செய்ற வேலையா இது உங்கள நினைச்சா எங்களுக்கு தான் பயமா இருக்கு ஆனா அத நினைச்சு நீங்க கொஞ்சம் கூட பயமே இல்லாம சுற்றித் திரியறீங்க என திட்டுகிறார்.

அதுமட்டுமில்லாமல் உங்க பேரன்ச உங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க அவங்களுக்கு செய்ற நன்றி கடன் இதுதானா எனவும் திட்டுகிறார்கள் மேலும் உங்கள காலேஜ்ல இருந்து டிஸ்மிஸ் பண்ணா மட்டும்தான் இந்த காலேஜ் உருப்படும் 25 வருஷமா இந்த காலேஜ் இந்த மாதிரி ஒரு கெட்ட பெயரை சந்தித்ததே கிடையாது என பேசுகிறார்கள் உங்க அப்பா அம்மாவை நாளைக்கு கூட்டிட்டு வாங்க உங்களை எல்லாத்தையும் பிசினஸ் பண்ணி வெளியே அனுப்புனா தான் இந்த காலேஜ் உருப்படும் அப்பதான் யாரும் இந்த தப்பா பண்ண மாட்டாங்க என கூறுகிறார்கள்.

உடனே அனைத்து பெண்களும் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்கள் ஆனாலும் அதற்கு கொஞ்சம் கூட தயங்காமல் உங்க அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டு வாங்க நாளைக்கு டிஸ்மிஸ் பண்ணி உங்களை வெளியே அனுப்ப வேண்டும் என கூறி விடுகிறார்கள் இதனால் இனியா தன்னுடைய தம்பி அப்பாவுக்கு போன் செய்து நடந்ததை கூறுகிறார் கோபியும் நான் வந்து பேசுகிறேன் என வாக்குறுதி கொடுக்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.