ஒரு கன்னத்தில் அறைந்த ராதிகா மற்றொரு கன்னத்தில் ஓங்கி அறைந்த பாக்யா.. இரண்டு பக்கமும் அசிங்கப்பட்டு நிற்கும் கோபி.!

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் பாக்கியா இனியாவிடம் அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார் ஒருவேளை நீ ஜெயிலுக்கு போயிருந்தால் ஒரு நாள் ஜெயிலில் இருந்தாலும் அந்த விஷயத்தை கேட்டு பல பேர் உன்னை புண்படுத்துவார்கள் அதனை உன்னால் தாங்க முடியுமா என கேள்வி கேட்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இன்னும் எத்தனை கஷ்டத்தை தான் நீங்க எனக்கு கொடுப்பீங்க என்னைய ஒரு மனுஷியா கூட நீங்க பாக்க மாட்டீங்களா நான் எவ்வளவுதான் தாங்குவேன் நாளைக்கு உங்க அப்பா வந்து புள்ளைய சரியா வளக்க தெரியல நீ வளத்த லட்சணம் இப்படித்தானே என கேள்வி மேல கேள்வி கேட்பார் அதுக்கெல்லாம் நான் தேவையில்லாம பதில் சொல்லிட்டு இருக்கணுமா என பாக்கிய அழுகிறார்.

என்னடா இதெல்லாம் ஒரு வாழ்க்கையா என்பது போல் எனக்குத் தெரிகிறது இவ்வளவு கஷ்டத்தையும் நான் வாங்கிகிட்டு உங்களுக்காக தான் வாழ்கிறேன் என கூறுகிறார் உடனே இனியா சாரிமா இனிமே இது மாதிரி நடக்காது எனக் கூறுகிறார்.

நீனும் ஒவ்வொரு டைமும் தப்பு பண்ணிட்டு சாரி சொல்லிட்ட இதோட இது இரண்டாவது முறை இனிமே சாரி சொல்ற பழக்கமே வேணாம் தயவு செய்து கொஞ்சமாவது யோசிச்சு செயல்படு என கூறுகிறார். மற்றொரு காட்சியில் ராதிகா மையூ இருவரும் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது கோபி மயூவை பார்த்து பேசுகிறார் அப்பொழுது ராதிகாவிடம் மன்னிப்பு கேட்க ராதிகா பொங்கி எழுகிறார்.

உடனே ராதிகா உங்க குடும்பத்துல யாராவது கஷ்டப்பட்டால் என்னைய திட்டுவீங்க கேவலப்படுத்துவீங்க அதுவே உன் குடும்பத்தில் நான் நல்லது செஞ்சா என்ன பாராட்டுவீங்க உங்க அம்மாவை நான் தப்பா கேஸ் போட்டுட்டேன்னு என்கிட்ட பேசவே இல்ல அதுக்கு நான் எத்தனை டைம் மன்னிப்பு கேட்டேன் அப்பயும் நீங்க பேசல ஆனா இப்ப இனியாவ காப்பாற்றினேன்னு வந்து பேசுறீங்களே இதுக்கு பேரு என்ன என்ன மூஞ்சில அடித்தது போல் பேசுகிறான்.

மேலும் நீங்கள் எல்லாம் ஒரு மனுஷனா என்பது போல கேள்வி கேட்கிறார். உடனே கோபி பாக்கியா வீட்டிற்கு சென்று எவ்வளவு பெரிய தப்பு நடந்திருக்கு இதுக்கெல்லாம் காரணம் நீ தான் என பாக்கியா மீது பழி சுமத்துகிறார் அது மட்டும் இல்லாமல் அம்மாவை பாத்துக்கணும் அப்பாவை பார்த்துக்கணும் என் பொண்ண பார்த்துகுனும் அதவிட விட உனக்கு என்ன பிசினஸ் முக்கியமா என கேள்வி கேட்க அதற்கு பாக்கியா ஆமா எனக்கு பிசினஸ் முக்கியம் தான் காசு எனக்கு இங்க ஒன்னும் கொட்டவில்லை. நான் பேகா மாட்டிகிட்டு போனா தான் காசு வரும் என கோபிக்கு பதிலடி கொடுக்கிறார்.

மேலும் பாக்கியா அம்மாவ பத்தி கவலைப்படாமையும் அப்பாவை பற்றி கவலை படல இப்ப என்ன அக்கறை வேண்டி கிடைக்குது என் பொண்ண எனக்கு பாத்துக்க தெரியும் ஒரு தப்பு நடந்துச்சு அதுக்காக என்ன பண்ண முடியும் என பாக்கியம் பதிலடி கொடுக்கிறார் இதெல்லாம் கேட்க நீங்க யாரு எனவும் கேட்கிறார் உடனே கோபி என் பொண்ணு இனிமே உன் கூட இருந்தா சரி வராது நானே அழைத்துக் கொண்டு போகிறேன் என கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இத்துடன் எபிசோட் முடிகிறது.