விரலை நீட்டி பாக்யாவை எச்சரித்த ராதிகா.. மயூவ பார்த்தா பாவமா இல்லையா..

பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்திய எபிசோடில் ஈஸ்வரியை போலீஸ் அரஸ்ட் செய்து விசாரணை நடத்தினார்கள் அது மட்டும் இல்லாமல் ராதிகாவின் கரு கலைந்ததற்கு காரணம் ஈஸ்வரி தான் என தீர்ப்பு வழங்க வரும் நேரத்தில் கடவுள் போல் மையூர வந்து காப்பாற்றுகிறார். தீர்ப்பு சொல்ல வரும் நேரத்தில் பாக்கியா கடைசியாக ஒரு நபரை விசாரிக்க வேண்டும் என பெட்டிஷன் கொடுக்கிறார்.

அப்பொழுது மயூரா மயூரா மயூரா என மூன்று டைம் கத்துகிறார்கள் அப்பொழுது ராதிகா மற்றும் கமலா அதிர்ச்சி அடைந்து கத்துகிறார். மயூரா வீட்டில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறுகிறார். அதாவது ஈஸ்வரி பாட்டி அம்மாவை தள்ளிவிடவில்லை எனக் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் ராதிகா பிளவர் வாஸ் மீது தடுக்கி விழுந்து விட்டார் ஈஸ்வரி பாட்டி அவரை பிடிக்க தான் சென்றார் ஆனால் கீழே விழுந்து விட்டார் என கூறுகிறார்.

உடனே நீதிபதி ஈஸ்வரியை விடுதலை செய்கிறார் ஆனால் மயூரா சாட்சி சொன்னதால் ராதிகா மயூரா மீது மிகுந்த கோவத்தில் இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் கமலாவும் மயூராவை திட்டுகிறார். இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் ராதிகா மற்றும் மயூரா இருவரும் நடந்து போய்க் கொண்டிருக்கும் பொழுது பாக்கியா அவர்களை பார்க்கிறார்.

அது மட்டும் இல்லாமல் பாக்கியா அருகில் சென்று மயூராவை தொடுவதற்கு செல்ல உடனே வெடுக்கென மயூராவை பிடித்து இழுக்கிறார். மேலும்நீ எப்படி சின்ன பொண்ணுன்னு கூட பாக்காம கோர்ட்டுக்கு இழுத்து அடிப்ப இதுவே இனியாவா இருந்தால் நீ இப்படி செய்வியா எனக்கேட்க பாக்யா எனக்கு வேற வழியே ஆப்ஷனும் கிடையாது அதனால்தான் நான் அப்படி செய்தேன் என கூறுகிறார் ஆனாலும் ராதிகா காத்து ஒரே பக்கமே எப்பொழுதும் வீசாது எனக்கும் ஒரு காலம் வரும் என கையை நீட்டி பாக்யாவை எச்சரித்து விட்டு செல்கிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.